ஐ...! போன்னு...!! என
வியந்த காலம் போயி, I phone da என அசால்ட்டாக சொல்லும்
காலமாகிவிட்டது.
உறவுகளை பிரிக்கும்
காரணிகளில் முதன்மை இடத்தை பிடித்திருக்கிறது செல்போன். அது பயன்ப்படுத்த படவில்லை
என்றாலும், அது இருந்தாலே பிரச்சனை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
FORWARD MESSGES ஆகவே
அனுப்பிக்கொண்டிருந்த நண்பனை அழைத்து ஏன்டா..., வேற வேலையே இல்லையா, இப்பதான் MESSAGE அனுப்பிகிட்டு உக்காந்திருக்க என
திட்டிவிட்டு ஃபோனை வைத்தேன். அப்போது தான் MESSAGE அனுப்பியே KEYBOARD தேய்ந்து போன பழைய நோக்கியா 1100
கண்ணில் பட்டது.
இதுல நூறு மெஸ்ஸேஜ்
ஃப்ரீயா இருக்கு, யாருக்காவது அனுப்பி காலி பண்ணு மாப்ள என்று ஃபோனை தந்தார் மாமா.
நான் யார் என்று சொல்லாமலேயே மெஸ்ஸேஜ் அனுப்பி நண்பனை கலாய்த்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் நண்பர்களுடன் உச்சக்கட்ட போதையில் இருக்கும் போது இந்த நம்பருக்கு கால்
பண்ணி கன்னாபின்னானு திட்டுங்கடா என அவன், மாமா நம்பரை கொடுத்துவிட்டான். நானும்
சேர்ந்து கொண்டு அவரை நார்நாராய் கிழித்து எறிந்தோம். மறுநாள் காலையில் நேத்து நீ
திட்டுனது உங்க மாமாவடா என அவன் சொன்ன போது தான் எல்லாம் தெளிந்தது.
சமீபகாலமாக ஒரு மோசமான
பழக்கத்தில் சிக்கி தவிக்கிறேன். கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது,
அவர்களோடு இயைந்து என்னால் பேச முடியவில்லை என்றால், ஃபோனை எடுத்து நண்பர்களுக்கு
மெஸ்ஸேஜ் அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன். என்னடா பழக்கம் இது என்று அப்பா கூட
இருமுறை கடிந்து கொண்டார்.
“நான் யாருனு சொல்லு
பாப்போம்” இது தான் என் முதல் அழைப்பில் நண்பர்களுடன் பேசிய முதல் வார்த்தையாக
இருந்திருக்கும்.
மச்சி ஸ்கோர்
அனுப்புடா...
143...
Me too…
இவ ஏன் இப்ப இத
அனுப்புறா என யோசித்துவிட்டு sent item எடுத்து பார்த்த போது தான் தெரிகிறது, நம்பர் மாத்தி அவன் தங்கச்சிக்கு
அனுப்புனது.
எப்ப பாத்தாலும்,
மொபைல்ல பத்தி குறை சொல்லிக்கிட்டே இருக்கியே மொபைல் இல்லாம ஒருநாள் உன்னால இருக்க
முடியுமா என நண்பன் கேட்டான். அடிக்கிற கை தான்டா அணைக்கும் என்று நான் சொன்னேன்.
இந்த G5 மொபைல் ரிங்டோன் கேட்டாலே
மண்டைக்குள்ள “டொய்ங்”னு ஒரு சத்தம் கேக்குது. கற்றது தமிழ் பிரபா மாதிரி கோவம்
வருது... பாத்து இருந்துக்கோங்க மக்களே...
No comments:
Post a Comment