காத்திருப்பில் காயம் செய்கிறானடி தோழி
எனக்கிது புதிதில்லை என்ற போதினும்
நெஞ்சு நின்று துடிக்குதடி.
கணிணி திரை முன்னே
காட்சிப்பிழையாய் இருப்பவனும் அவனே
அலைப்பேசியில் அலைக்காமல்
கொஞ்சம் கொஞ்சமாய் கொல்பவனும் அவனே
முகநூல் இல்லையேல் அவனின்
முட்டைக்கண்விழி முகமும் முழுதாய் மறந்திருப்பேன்.
தூங்குபவன் போல் நடிப்பவனிடம்
எப்படி நான் தூது அனுப்புவேன் தோழி
கனவினில் அவன் வருவான் என காத்திருந்தேன்
ஆனால் கண்களை மூட மறந்துவிட்டேன் தோழி.
என்போல் பேதை உண்டோடி.
கவிதையில் அவன் வருவான் என எண்ணி
காகிதம் தேடி அலைகிறேனடி
காகிதம் இல்லையேல் கவிதை வாராதோ...
காரணம் கேட்காதேயடி தோழி – நான்
காதல் மதம் பிடித்து அலைகிறேன்.
நீலக் கடலருகே நுரை ததும்பும் கரையருகே
கால்களை நனைத்து கண்ணன் நிற்பான்
நான் பின்வந்து அவனை அணைக்கும்
காட்சி நீள்கிறது முன்னே
நினைவு திரும்பினால் அவன் இல்லை
என்மேல் உனக்கு கருணையே இல்லையாடா
என் கண்ணா...
Nanba super :)
ReplyDelete