Sunday, 30 September 2012

inbox


விஜய், அஜித்தை எல்லாம் கலாய்க்கிற மெஸ்ஸேஜ் அவங்களுக்கு போகுமா, போகாதா...

நண்பன் பர்த்டேக்கு விஷ் பண்ண நைட் 12மணிக்கு கால் பண்ணேன். நீ ஏன்டா கால் பண்ண என் ஆளு தான் ஃபர்ஸ்ட்டு விஷ் பண்ணனும்னு நினைச்சு இருந்தேன்டா என சொன்னான். அன்றிலிருந்து அவன் பர்த்டேக்கு விஷ் பண்றதயே விட்டுட்டேன்.

சச்சின் செஞ்சுரி அடிச்சா யாரு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவாங்க...

ஹல்லோ...
ஹெல்லோ...
அண்ணே.., அரிசி வந்துருச்சாண்ணே,
இல்லையேப்பா...
எப்பண்ணே வரும்...
தெரியலியேப்பா...
விளையாடதிங்கண்ணே...
நான் இப்ப தான்பா விளையாடவே போரேன்...
கால் கட்.., ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதே நம்பரில் இருந்து மீண்டும் அழைப்பு.
ஹல்லோ ராங்க் நம்பர்னா சொல்ல வேண்டியது தானே...
சரி ராங்க் நம்பர்னு சொல்லி கால்ல கட் பண்ணிட்டேன் பாவம் மனுசன் என்னென்ன சாபம் விட்டானோ...

இந்த பொண்ணுங்க எப்படி தான் இவ்வளவு ஸ்பீடா மெஸ்ஸேஜ் அனுப்புறாங்கனே தெரியலப்பா...
தலவலிக்குதுனு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்புனேன்...
ஏன் நேத்து சரக்கு அடிச்சியா...?
என்ன லவ் பண்றியா இல்லையா...?
நான் எது சொன்னாலும் கேக்க மாட்டியா...?
ஃபர்ஸ்ட் மெஸ்ஸேஜ்க்கு ரிப்ளே அனுப்புறதுக்குள்ள இத்தன மெஸ்ஸேஜ் வந்தா நான் எதுக்கு ரிப்ளே பண்றது... எதுக்கு வம்புனு ரிப்ளே பண்ணாமலேயே விட்டுட்டேன்.
நான் எது கேட்டாலும் சொல்ல மாட்டல...? I hate you…
இதுக்கு மட்டும் ரிப்ளே பண்ணேன் thank you…

ஒரு விருந்துக்கு நானும் என் அண்ணனும் ஒன்றாக ஒரு பேருந்தில் சென்றோம். அவன் டிக்கெட் எடுப்பான்னு நான் இருக்க, நான் டிக்கெட் எடுப்பேன்னு அவன் இருக்க, கடைசில ரெண்டு பேருமே டிக்கெட் எடுக்கல... கரெக்ட்டா வந்தானுக மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டோம். அப்போ தான் வந்துச்சு ஒரு மெஸ்ஸேஜ், “என்ட ஜேஞ்ச் இல்ல நீ டிக்கெட் எடுத்துடு”னு எங்க அண்ணன் ஏறுன உடனே அனுப்புன மெஸ்ஸேஜ்.

அமெரிக்கா போயிட்டு வந்த நண்பனின் பார்ட்டி. ஃபாரின் சரக்கு என்பதால் காலைலியே பார்ட்டி. நம்ம சென்னை ட்ராஃபிக் பத்தி தான் தெரியுமே அதுவும் பஸ்ல போயிட்டு இருந்தேன். எங்கடா இருக்க...?, எங்கடா இருக்க...?னு கால் பண்ணிக்கிட்டே இருந்தானுக.
மச்சான் இந்தா சோழிங்கநல்லூர் வந்துட்டேன்டா, இன்னும் பத்து நிமிஷத்துல கேளம்பாக்கம் வந்துடுவேன்.
பெருங்குடி எறங்க வேண்டியிருக்கா... பெருங்குடி பெருங்குடி...
கண்டக்டர் அண்ணே ஏன்ணே...?

கண்ணிரண்டும் மூடி தொலைப்பேசி சுழற்றுங்கள்
எதிர்முனையில் எவர்வரினும் அன்றைய விருந்துக்கு அழையுங்கள்.
-    பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பில் வைரமுத்து.

ஒரு நாள் போரடிக்குதே நாமளும் ட்ரை பண்ணி பாப்போம்னு ஒரு நம்பருக்கு கால் பண்ணேன். இங்க்லீஷ் படம் நிறையா பாத்து இருப்பா போல, செமையா திட்டிவிட்டா, அதுலயும் ஒரு வார்த்தைக்கு மீனிங்க் கண்டுபிடிக்கவே எனக்கு ஒரு வாரம் ஆச்சு...
மன்னிச்சுடுங்க வைரமுத்து சார் அந்த கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணி உங்களயும் திட்டிட்டேன்.

நெடு நாட்களுக்கு பிறகு தோழியின் அழைப்பு, N-ல் ஆரம்பிக்குமாறு அவள் குழந்தைக்கு பெயர் சொல்ல சொன்னாள். நறுமுகை, நிறைமதி என பரிந்துரை செய்தேன். அவர்களுக்கு நறுமுகை என்ற பெயர் பிடித்துவிட்டது. நறுமுகை – நறுமணம் மிக்க புதிதாய் மலர்ந்த மலர். அழகிய தமிழ் பெயர்கள் நிறைய இருக்க எதற்கு புரியாத மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்.

ஒன் நம்பர் ரிசீவ்டு!
சாலையில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவ நினைத்தால், 1098-க்கு போன் செய்யுங்கள். இது மட்டும் இல்லை... குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது, சிறார் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து தருவது எனக் குழந்தைகள் மீதான அனைத்து வகையான தீங்குகளுக்கு எதிராகவும் இந்த எண்ணுக்கு அழைத்து பேசலாம். அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்!
நன்றி :- ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment