Tuesday, 11 September 2012

சாத்தியம் தானா...?


முழுநிலவாய் முகம் இருக்க
எதையோ வெறிக்கும் விழிகள்,
எங்கெங்கோ தொட துடிக்கும்
சில நரிகளின் விரல்கள்,
வாஞ்சை பேச்சில்
வஞ்சிக்கும் வல்லூறுகள்...
எத்தனை போர்க்களமடா...

உன் எதிர்பாராத முத்தத்தில்
உயிர் வாழ்கிறேன்.
நீயும் ஏமாற்ற நினைத்தால்
நான் என்னாவேன்.
கசிந்துருகும் விழிநீரும்
திராவகமாய் நெஞ்சுக்குழி எரிக்கிறது.

பேருந்தில் சில கரப்பான்ப்பூச்சிகள்
சாலையில் சில சகதிகள்
வீதியில் சில எச்சங்கள்
உறவிலும் சில உரசல்கள்
அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன்
ஐந்து நிமிட சுகப்பொருளாய் நினைத்து
நீயும் என்னை அணைக்கும் வரை.

சதைக்கு அலையும் உலகில்
சாதிக்க சொல்கிறாய்
சாத்தியம் தானா...?
சொல் கண்ணே...
கட்டி அணைத்தால் – உன்
விரல்கள் மேயும் இடங்கள் எத்தனை...?

No comments:

Post a Comment