ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு
ஆறாவதாய் ஆண் குழந்தைக்கு முயற்சிப்பதாக
பக்கத்துவீட்டு மாமா சொன்னார்.
யான் பெற்ற சிற்றின்பம்
பெருக்க இவ்வையகம்
என நினைத்துவிட்டார் போலும்...
கடைகள் அடைக்கப்பட்ட மாநகர வீதியில்
பதறாமல், பரிதவிக்காமல்
பசியாற இளைப்பாறி நடந்தேன்
முதன்முறையாக...
கடந்து சென்ற
தாவணி கவிதை ஒன்றை
நீ அழகாய் இருக்கிறாய்
என சொல்ல துடித்து
தைரியம் இல்லாமல்
முடங்கி போனது மனது...
அங்க என்ன சார் பிரச்சனை என்றேன்
முஸ்லீம்ஸ் என ஒற்றை வார்த்தையில்
ஒரு இனப்படுகொலைக்கான
வித்தை விதைத்து சென்றார்
ஒரு காவல்துறை அதிகாரி.
முஸ்லீம்ஸ் எல்லாரும்
தீவிரவாதிகள் இல்லை சார் என்றேன்
ம்ம்... உன் பேர் என்ன என்றார்
மிரட்டல் தொனியுடன்
யோகி என்றேன் நான்.
அப்துல் கசாப் என்றிருந்தால்
தூக்கில் இட்டிருப்பாரோ...
தரை மீது படர்ந்ததும்
எனை தழுவி கொண்டது
பின் மதியத்து மயக்கம்.
என் பொழுதுகளை களவாடியது
எதுவென்று தெரியவில்லை.
யுவியின் சிக்சர் ஒரு நொடி
முகநூலில் நண்பனுக்கு லைக் மறுநொடி
அலைபேசியில் அக்காவின் நலம் அடுத்த நொடி
விளம்பர இடைவெளியில் திரைப்படம் மறுநொடி
என தடம் மாறி கொண்டிருந்த மனது
இந்த கவிதையை படைத்தது
எப்படி எனவென்றும் தெரியவில்லை.
இன்னுமொரு நாள் என
கழிந்த பொழுதில்
உருப்படியாய் செய்தது
இது ஒன்றை தான் என
இளைப்பாற சென்று விட்டது மனது
ஆனால் உறக்கம் மட்டும் வரவேயில்லை...
No comments:
Post a Comment