நம்ம நேரத்தையெல்லாம்
வீணடிக்கும் யோகியுடன் ஒரு கலகல பேட்டி எத பத்தி கேட்டாலும் தயங்காமல் பதில்
சொல்கிறார். நம்மள எல்லாம் யாரு பேட்டி எடுக்க போறா..., அதான் எனக்கு நானே எடுத்துகிட்டேன்.
சின்னபையன்....?
வீட்டிற்கு கடைசி
பையன், அதனால எல்லாரும் அப்பிடி கூப்பிடுவாங்க... சின்னபையன் என எனை சீண்டி
சூடுபட்டு கொண்டவர்களும் உண்டு.
யோகி...?
யோகேஷ்வரன் யோகி ஆனது தனிக்கதை..., மறக்கமுடியாத
ஒரு தோழி விட்டுச்சென்ற தடயம்.
யாழி...?
யோகினா அடுத்து யாழி தானா... நல்லா இருக்குங்க
உங்க பேட்டி...
பாரதிக்கு கண்ணம்மா என்ற பெயரில் எவ்வளவு
காதலோ.., அவ்வளவு காதல் எனக்கு அந்த பெயரின் மேல். என் எழுத்துகளில் எங்கே ஒரு
பெண்ணின் பெயர் குறிப்பிட நேர்ந்தாலும் இந்த பெயர் தான் வந்து செல்லும். எனவே தான்
யாழிக்கு கவிதைகள்.
கொள்கை...?
சிரிப்பது, சிரிக்க வைப்பது
ரசிப்பது, ரசிக்க வைப்பது
பொழுதுபோக்கு...?
ரசிப்பது, எழுதுவது, வாசிப்பது
வாசித்ததில் பிடித்தது...?
பொன்னியின் செல்வனும், கள்ளிக்காட்டு
இதிகாசமும்.
ஆளுமை...?
பாரதி
வாழ்க்கையில் கடைபிடிக்கும் தத்துவம்...?
களவும் கற்று மற...
ஆனா பொய் சொல்றத மட்டும் மறக்க முடியல...
வாழ்க்கை கற்று தந்த தத்துவம்...?
யார் மீதும் அதிகமாய் அன்பு செலுத்தாதே...
பலவீனம்...?
கூச்ச சுபாவம், அதீத தயக்கம்
பயம்...?
நான் சொன்ன
பொய்யெல்லாம் தெரிஞ்சுடுமோ...
நட்பு...? நண்பர்கள்...?
இந்த வகையில் நான் வஞ்சிக்க படவேயில்லை. நல்ல
நண்பர்களை சுற்றி நான் இருக்கிறேன். தனித்து காட்டில் விட்டாலும் அங்கே எனக்கு
துணையாய் ஓர் நண்பன் இருப்பான்.
முகேஷ் - மழலை முதல் மரணம் வரை
அன்பு - காதல் போல் புரிதல் கொண்ட நட்பு
தினேஷ் - எனெக்கென அவன், அவனுக்கென நான்
அரவிந்த் - உலக சினிமா முதல் உள்ளூர் இனிமா வரை
பகிர்ந்துக்கொள்ளும் நண்பன்
காதல்...?
ஏங்க இந்த கேள்விய கேட்காம பேட்டியே எடுக்க முடியாதா...
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு தொடர்கிறார்.
நானாக தேடி சென்ற காதல் என்னை நிராகரித்தது, என்னை தேடி
வந்த
காதலை நான் நிராகரித்துவிட்டேன்.
திருமணம்...?
வீட்டின் சம்மதத்தோடு காதல் திருமணம்
செய்துக்கொள்ள ஆசை, இல்லனா எந்த கரிசகாட்டுல இருக்காளோ...
பிடித்த நடிகை...?
இப்ப தான் நம்ம ஏரியாக்கு வந்து இருக்கீங்க...
ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு, பரவால்ல டாப் ரேங்கர்ஸ் மட்டும் சொல்றேன்
அமலா நாகார்ஜுனா, கௌதமி, சிம்ரன், ஜோ, அனுஷ்கா,
காட்ரினா கைஃப், இப்போதைக்கு லக்ஷ்மி மேனன். But all-time favorite is AISHWARYA RAI.
Celebrities crush…?
ஷ்ரேயா கோஷல், சாய்னா
நேவால்...
சமீபத்திய கிசுகிசு...?
என்ன பத்தி என்டயே
கிசுகிசுவா... சூப்பருங்க... ஆனா யார்ட்டயும் சொல்லிடாதீங்க...
மாடி வீட்ல இருக்குற
பொண்ண லவ் பண்றேன்னு என்டயே சொல்றானுக பாவி பசங்க...
அரசியல்...?
அப்பா அ.தி.மு.க
பிரதிநிதி.., மாமா தஞ்சை மாவட்ட முக்கிய தி.மு.க புள்ளிகளுல் ஒருவர். எனவே
கவனிப்பதும் விவாதிப்பதும் உண்டு.
பிடித்த
அரசியல்வாதி...?
இறந்ததில் காமராஜர்,
இருப்பதில் தமிழருவி மணியன். கருத்துகள் முரண்பட்டாலும் தோழர் நல்லக்கண்ணுவின்
எளிமையும், தூய்மையும் பிடிக்கும்.
நீண்டநாள் நிறைவேறாத
ஆசை...?
நீ இல்லை என்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன் இந்த வார்த்தைகளை சொல்லவாவது ரஹ்மானை சந்திக்க வேண்டும்.
அப்புறம் ஒரே ஒரு பால் சச்சினுக்கு வீசனும்.
சாஃப்ட்வேர்...?
தசாவதாரம் கமலஹாசன்
மாதிரியோ..., ஏழாம் அறிவு ஷ்ருதிஹாசன் மாதிரியோ..., ஏதாவது ஒரு கிருமியையோ இல்லை
பரம்பரை பண்பையோ ஆராய்வது தான் விருப்பமாய் இருந்தது. குடும்பத்திற்காக தேர்ந்து
எடுத்தேன்.
வாழ்க்கை...?
பிறருக்காகவே
நீள்கிறது... என்று எனக்காக வாழ்வேன் என தெரியவில்லை.
கவிதை...?
விளையாட்டாய் ஒட்டிக்கொண்ட
அழகிய வினை.
முதல் கவிதை...?
நீ பேசமால் சென்றாலும்
உன் விழிகள் பேசும்
மௌணம் அழகு...
அங்கீகாரம்...?
பாரத் கல்லூரியின்
ஆண்டு மலரின் முதல் பக்கத்தில் இடம்பெற்ற கவிதை முதல் அங்கீகாரம். தோழிக்காக எழுதிய
கவிதைக்கு கிட்டிய பரிசு இரண்டாம் அங்கீகாரம். விப்ரோ தளத்தில் தினம் கிட்டும்
நட்பு மூன்றாம் அங்கீகாரம். ஆனால் என்னை அதிகமாய் சிந்திக்க வைத்து எழுத வைக்கும் இந்த
தளத்தைத்தான் சிறந்த அங்கீகாரமாய் கருதுகிறேன்.
ஒரு நன்றி அல்லது
மன்னிப்பு...?
நன்றி அன்புக்கு...
மன்னிப்பு யாழிக்கு...
No comments:
Post a Comment