Friday, 31 August 2012

INBOX


10 new messages received

குறுஞ்செய்தியை ரசிக்கும்
எல்லா பெண்களும்
அழகாகவே தெரிகிறார்கள்...



உன்னை நினைத்தவுடன்
சிணுங்குகிறது என் அலைபேசி...
இது என்ன டெலிபதியா...
இல்லை செல்விதியா..



உன் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் சமயங்களில்
FORWARD MESSAGE அனுப்பும்
நண்பன் மட்டும் கைல கிடச்சான்...



முகநூலும்அலைபேசியும் வந்த பிறகு
சங்க இலக்கியத்திலிருந்து
தூது என்ற வகையையே எடுத்துவிட்டார்களாம்....
-தமிழ் ஐயாவின் புலம்பல்.



செல்போன் டவர்களின் அதிக கதிர்வீச்சால் சிறு பறவையினங்கள் அழிந்துவிட்டன.     –செய்தி
அட போங்கயா... ஈழத்துல எங்க இனம் அழிஞ்சதுக்கே நாங்க கவலபடல...




UNKNOWN நம்பர்ல இருந்து கால் வந்தாலே எடுப்பதில்லை...
ப்ராஜக்ட் காலோ என்ற பயம்...



சீனாவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களை SUBSCRIBE செய்து கொண்டால் தினம் ஒரு பகுதி குறுஞ்செய்தியாக வந்து சேர்கிறது...



செல்போன் கண்டுபுடிச்சவந்தாயா உலகத்துக்கே சாமிஉச்சக்கட்ட போதையில் நண்பனின் பகுத்தறிவு தத்துவம்...



ஒன்னாம் தேதி காலையில்
மச்சான் இன்னைக்கி ட்ரீட் வைடா...
ஏன்டா...
அதான் BULK SMS தடைய நீக்கிட்டாங்கள....



WRONG CALL வந்தாலும் மொக்கை போடும் பழக்கம் எனக்கு உண்டு...
ஹாய் சுதாகர்...
ம்ம்.. நீங்க...
என்னடா இன்னும் தூக்கமாநைட் படம் பார்த்தியா...
ஆமா...
மன்னிக்கவும் எழுத முடியாத அளவிற்கு BAD WORDS…
சிறிது சமாளிப்பிற்கு பின் செல்லமாய் கொஞ்சம் கொஞ்சல்கள்... அப்படியே பேச்சு நீண்டது...
திடீரென நீ யாருனு நினைச்சுகிட்டு என்ட பேசிட்டு இருக்க...
திவ்யா தானே இல்ல இல்ல ப்ரியா....
CALL END
யார் காதலுக்கோ சுபம் போட்ட சந்தோசம்...

No comments:

Post a Comment