எத்தனைக் கோடி இன்பங்கள் வைத்தாய்
எங்கள் இறைவா...!
நட்பென்று ஒன்றை தந்தாய்
நண்பர்கள் கோடி தந்தாய் - தனிமையிலே
வாழ்க்கை வெறுக்கும் வேளையிலே
துணையென்று நிற்க வைத்தாய்...
காதல் ஒன்று தந்தாய் – காகிதமாய்
என்னை பறக்க வைத்தாய்.
காதலில் வலியும் தந்தாய்
என்னுள் என்னை உணர வைத்தாய்...
வெள்ளை நிலவொன்று தந்தாய் – அதில்
அவள்முகம் காண வைத்தாய்
ஒருநாள் மறைய வைத்தாய்
என்தவிப்பை நீ ரசித்து வைத்தாய்...
அழகிய இரவுகள் தந்தாய்
அர்த்தமின்றி அலைய வைத்தாய்
சேதி சொல்லும் கனவுகள் தந்தாய் - வாழ்வின்
விசித்திரங்கள் விளங்க வைத்தாய்...
தமிழை கற்க வைத்தாய் - என்னை
தரணியில் நிலைக்க வைத்தாய்
கவிதை புனைய வைத்தாய்
நித்தம் எனை கரைய வைத்தாய்...
புத்தகங்கள் எனக்கு அளித்தாய்
என்னை புதைந்திருக்க வைத்தாய்
வரலாற்றை சொல்லி தந்தாய்
வாழ்வின் நல்லறிவினை தருவித்தாய்...
இசையை கேட்க வைத்தாய்
அழகை ரசிக்க வைத்தாய்
இயற்கையை எனக்கு அளித்தாய்
அளவில்லா அன்பு வைத்தாய்
வாசம்வீசும் மழைத்துளி தந்தாய்
தாகம்தீரா உயிர்த்துளி தந்தாய்
இயல்பாய் சிரிக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்
எப்படி சொல்வேன் என் இறைவா
ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் நன்றிகள்...
No comments:
Post a Comment