எங்க வீட்டு மாடியில் படுத்து, வானத்தை பார்த்து இரவினை
கழிப்பது என்பது, எனக்கு என் தாயின் மடியில் படுத்து கதைகள் கேட்கும் தருணம்
போன்றது. பல சமயங்களில் நான் கவிதை என்ற பெயரில் கிறுக்க தொடங்கியதும் அங்கே
தான்..
முகநூலை அனைத்து விட்டு புரண்டு படுத்த தருணம், மெலிதாய்
எட்டி பார்த்தது ஒரு நினைவு. இங்க தானே அரவிந்த், தினேஷ் ரெண்டு பேரும் படுத்து
இருந்தானுக, எத்தனை சந்தோசம் அன்றைய இரவு. லேசாய் சிரித்தும் கொண்டேன் அதற்கு
அடுத்த நாள் நடந்தவற்றை நினைத்து...
வானத்தை
பார்த்தால் முழு நிலவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் இரவை பகலாக்கும்
முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.. மனதில் சின்ன ஆசை ஒன்று தோன்றியது அந்த
நிலா போல நானும், நட்சத்திரங்களை போல என் நண்பர்களும் என்றும் என்னை சுற்றி
இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று..
இந்த உலகத்துல
நான் பெருசா எதுவும் சாதிக்கல.., ஆனா எனக்கு கஷ்டம் வந்தப்ப எல்லாம் நான்
கேட்காமலேயே எனக்கு உதவுற நண்பர்கள் எனக்கு கிடைச்சிருக்காங்க.. எனக்கு அது போதும்
என்று அன்பு ஒரு இரவில் சொல்லியதும் இதயம் வருடி போனது அந்த நொடியில்...
பிறந்தவுடன் ஆரம்பம் ஆனதா.., இல்லை தவழ தொடங்கியதும்
தொடங்கியதா.., இல்லை மழலை மொழியில் உறவாடிய உடன் என் நட்பும் முகேஷ் உடன்
உறவாடியதா.. தெரியவில்லை, இன்று வரை தொடர்கிறது...
மதிய நேரத்து ஊரணி
குள குளியல், சனி கிழமைகளில் புது ஆற்றில் குளியல், இடைவெளிவிடாத க்ரிக்கெட், இடைவேளைகளில் இனகவர்ச்சி
காதல், திருட்டு தம் அடிக்க இருட்டும் வரை காத்திருத்தல், புகை வாடையை மறைக்க
புளிய மர இலைகளை உதட்டிலும், விரல்களின் இடுக்கிலும் தேய்த்துக்கொண்ட அறிவியல்,
சொல்லாமலேயே கடந்து சென்ற அவனின் கண்மணி காதல்,அடுத்த வருடம் குழந்தையுடன் அவள்
முகேஷ் நல்லா இருக்கியா..? என கேட்ட போது பதில் சொல்ல முடியாதநிலை என எவ்வளவு
அழகான நாட்கள் டா நண்பா.. அது..
நட்பும், காதலும் எங்கே எப்படி உருவாகும் என்று
கண்டுப்பிடித்து கூறும் அளவிற்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை.. ஒருத்தரை
பார்த்ததும் பிடித்து விடுகிறது, அவரிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் பார்த்து
வளர்வது காதல்.. சரியான நேரத்தில் நம் தவறை உணர்த்தி நம்மை திருத்துவது நல்ல
நட்பு...
நான் டைட்டானிக்
கதை (கதை... சரி விடுங்க.. சில பல முக்கியமான scenes) சொல்லும் அழகை பார்த்து வளர்ந்தது நட்பு G.K.வினோத்துடன்...
முதன்முறையாக
என்னை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு, தினந்தினம் புதிது புதிதாய் கதைகள் பேசி
பழக ஆரம்பித்தோம்.. பருவத்தில் ஏற்படும் மாற்றம் முதல் பக்கத்து வீட்டு ஆன்டி வரை
பேசாத விஷயங்கள் இல்லை.. என் முதல் காதலுக்காக (சரியா தெரியலங்க அப்படி தான்
நினைக்கிறேன்..) நிறைய ADVICE
பண்ணான். ஆனா நான் அவனை விட அவள ரொம்ப நம்பினேன்,
ஏமாற்றம் தான் கிடச்சது.. அதுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பல..
எங்கள மேலும்
நெறுக்கம் ஆக்கினது கிரிக்கெட்.. ஊர்ல விளையாடும் போது நான் OPENING BATSMAN, ஆனா என்ன BOWLING போட வச்சு காமெடி பண்ணி.. அதனால சில பல
மேட்ச் வின் பண்ணி.. உன்ன என்னால மறக்கவே முடியாது நண்பா...
ராஜராஜன்... ஒரு நாள் ரொம்ப பவ்யமா பக்கத்துல
உட்கார்ந்து
நீ ஆலக்குடியா..?
இல்ல பூதலூரா..னு கேட்டான்..
பூதலூர் டா ஏன்
கேக்குற.. னு நான் கேட்டேன்..
இல்ல ராதிகாவ
தெரியுமா..? தயங்கி தயங்கி கேட்டான்..
நல்ல தெரியும்
டா.. அவ என் FRIEND தான் டா.. ஏன் டா அவட்ட எதுவும் பிரச்சனையா..
அவள எனக்கு
பிடுச்சிருக்கு டா...
டேய்.. என்ன டா
சொல்ற.. சரி விடு நான் அவட்ட சொல்லிக்கிறேன்.. னு சாதாரணமா அப்ப சொல்லிட்டேன்..
பின்னடி தான் தெரிஞ்சது அது எவ்ளோ பெரிய கஷ்டமான வேலைனு..
நான் அவன் காதல
சொல்ல போனா அவ அவ காதல தூக்கிக்கிட்டு என்ட வரா.. நான் பேச ஆரம்பிக்கிறதுக்கு
முன்னாடி அவ புயல் அடிக்கிற மாதிரி ஆரம்பிச்சு, அழுது, என்னயும் அழ வச்சு, என்ன
பேசவே விடாம அப்பிடியே போயிட்டா.. அது காதல்னு எனக்கு அப்ப புரியல.. திரும்ப
அவளுக்காக காத்திருந்தேன் எப்படியாச்சும் ராஜா லவ்வ சொல்லிடனும்னு.. வாய்ப்பே
கிடைக்கல..
இப்பவும் ட்ரையின்
ல போகும் போது SECOND
CARRIAGE 16 NUMBER SEAT பாத்தா அவ ஞாபகம் வராம இருக்காது.. அவ எப்பவும்
உட்காற SEAT NUMBER தான் அது..
ஒரு முக்கோண காதல்
கதையா.. நட்பின் முகம் உடைச்சு போச்சு.. புரியாத பறுவக்காதல்.. அவன் காதலை சொல்லாதத்திற்க்காக
ராஜாவிடமும், அவளின் காதலை புரிந்துக்கொள்ளாதத்திற்காக ராதிகாவிடமும் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்..
என் தமிழ் ஆசான் திரு.ஐ.ஆரோக்கிய சாமி ஐயா.. தமிழை ஒரு
காதலியை ரசிப்பது போல எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தார். கவிதைகள் மேல் நாட்டம் வர
ஆரம்பித்தது.. குமுதத்தில் வரும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து வந்து ஒரு
மேடைப் பேச்சாளனிடம் பகிர்ந்து கொள்வேன்.. பள்ளி முடிந்தவுடன் அவன் நட்பும் முடிந்து
இருந்தது.. ஒரு நண்பர்கள் தினத்தன்று
ஹாய்.. டா.. கோபால்
எப்படி இருக்க..? என கேட்ட போது
டேய்.. பாலா.. எப்படி
டா.. என் நம்பர் கிடச்சது, எப்படி டா.. இருக்க..? என்ன பன்ற.., எங்க இருக்க.. னு..
சந்தோசத்துல தவிச்சு என்ன பேசவே விடாம.. அவன் நார்மலா வரதுக்குள்ள போதும் போதும்
னு ஆக்கிட்டான்.. நண்பர்கள் தினத்துக்கு எங்களுக்கு கிடச்ச பரிசு தொலைந்துப்போன
எங்கள் நட்பு..
இவன் கூட ஆறு வருசமா இருக்கேன்.. நான் இவனுக்கு எதுவுமே
பண்ணது இல்லை என்றாலும்.. அவனோட எல்லா நிலையிலும் நான் இருந்து இருக்கேன்.. என்னோட
LIFE CHANGER இவன். B.C.A முடிச்சுட்டு M.C.A பண்ணலாமா வேணாமா
னு நான் தவிச்சபோது எனக்கு தெரியாம எங்க மாமாட்ட பேசி என்ன SATHYABAMA UNIVERSITY ல படிக்கவச்சு இப்ப கைல ஒரு வேலையையும் வாங்கி
கொடுத்துட்டான்..
இவன் கூட
இருந்தப்ப தான் அதிகமா சிரிச்சு இருக்கேன்..
அவனுக்கு நிறைய
கஷ்டம் இருந்தப்ப கூட மத்தவங்கள சிரிக்கவச்சு.. சந்தோசபடுத்துவான்..
இவன் PHOTO காமிச்சா போதும்.. இவன முன்ன பின்ன சந்திக்காதவன் கூட
தெரிச்சு ஓடிருவாங்க.. அந்த அளவுக்கு PHOTO பிரியன்.. எல்லாரும் புரிஞ்சு இருப்பாங்க
டா.. அன்பு.. உன்ன பத்தி தான் சொல்றேன்..னு..
இவரு M.C.A DEPT கே செல்லப்பிள்ளை.., FRIENDSHIP DATABASE..,
யாருக்கு எது பிடிக்குமோ அத மட்டும் தான்
செய்வான்.., கோபம் வராது.., எதுக்கும் ஃபீல் பண்ண மாட்டான்,( ஒரு விஷயத்த தவிர..)
வணக்கம் தல.. னு சொல்லிகிட்டே.. அவன அடிக்க செமையா ப்ளான் போட்டு கொடுப்பான்..,
எல்லாருக்கும் இவன
பிடிக்கும்.. எல்லாருடைய சோக கதையும் இவன்ட்ட இருக்கும்... இவன்ட்ட பேசிட்டு இவன
விட்டு பிரிஞ்சு வர மனசு இல்லாம எத்தனையோ நாள் தவிச்சிருக்கேன்..
I LOVE YOU DA DINESH…
என் சித்தப்பா ஒரு நாள் இப்படி friend friend னு அலையிரியே.. கஷ்டத்துல சொந்தக்காரங்க தான் ஹெல்ப்
பண்ணுவாங்க தெரிஞ்சுக்கோ னு சொன்னார்..
அட போங்க
சித்தப்பா.. அப்ப கூட இன்னொரு ஃப்ரென்ட் தேடி தான் போவேன்.. சொந்தக்காரங்கள சீண்ட
மாட்டேன் னு சொல்லிட்டு வந்தேன்..
IF YOU FEEL SAD, BE RELAX, ONE FRIEND WILL COME
TO WIPE YOUR TEARS AND SADNESS…
இப்படி பட்ட நண்பர்களை
எனக்கு கொடுத்ததுக்காக இருக்கிறாறோ இல்லையோ.. அந்த கடவுளுக்கு நன்றி..