Wednesday, 16 May 2012

நீ இருந்தாய்..


உன் சிறுமுதல் பார்வையால்
முதல் மழை என் மனதில்..

இதுவரை யாரையும்
காதலித்தது இல்லை என்றாய்...
முதல்முறையாக உன்னை
காதலிக்கத் தொடங்கினேன் நான்..

நீயும் நானும்
எதிர்பாராத நொடியில்,
சொல்லிவிட்டேன் என் காதலை..

பொறுத்திருக்க சொன்னாய்..
நான் உன்னை
வெறுத்திருந்தேன்..

காத்திருக்க சொன்னாய்..
நான் கரைந்து போய் நின்றேன்..

சின்னச்சின்னதாய்..
முத்தங்கள் தந்து,
அப்படியே அணைத்து நின்றாய்..
என் கோபங்கள் மறைந்து
உறைந்து நின்றேன்..

அறை மனதாய்..,
மனதை அடக்கம்
செய்ய சொன்னாய்..
அடுத்த வினாடியே
உன்னை நினைத்தேன்..

நீ எனக்கில்லை..
நீ எனக்கில்லை என்றாய்..
என் காதலை
வளர்த்துக் கொண்டே
சென்றேன் நான்..


உன்னுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும்
நண்பா என்கிறாய்..
சிரிப்பதா.. அழுவதா..
என தெரியாமல்
இரண்டையும் செய்துவிட்டு
பிரிகிறேன் நான்..

நீ இருந்தாய்
அது போதும்...

Friday, 11 May 2012

இரவு


அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்று வீதிகளில் திரிவது
எனக்கு பிடித்திருக்கிறது..

திடுக்கிட்டு விழித்து
குறைத்த நாய்களும்,
இன்று எனக்கு துணையாக
நகர்வலம் வருகிறது..

எனக்கென்று இருக்கும்
இந்த தனிமையில்
எனை கேள்வி கேட்க யாருமில்லை...

காதலியின் கண்ணீர் துளிகள் இல்லை..
நட்பின் நச்சரிப்பு இல்லை..
உறவின் உருத்தல் இல்லை..
துளி நீரில் இமை எரிக்கும்
நினைவுகள் இல்லை..
நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
புனிதமடைகிறேன்..
மனிதம் அறிகிறேன்..

என் இரவுகளில் பல- இப்படியே
கடந்தும் கலைந்தும்
செல்கின்றன..
காரணமும் தெரியவில்லை..
கவிதையும் புரியவில்லை.. –ஆனால்
அர்த்த ராத்திரியின்
அசட்டுதனங்கள் மட்டும் குறையவேயில்லை..

Wednesday, 9 May 2012

யாழிக்கு கவிதைகள்


உன்னுடன் பகிர்ந்துக் கொள்ளப்படாத
என் நினைவுகள் எல்லாம்
தரை எங்கும் சிதறி கிடக்கின்றன..
ஆனி மாதத்து வேப்பம் பூக்களாய்...

என்றாவது ஒரு நாள்
நீ என்னை நலம் விசாரிப்பாய்
என்ற நினைவே
என்னை சிதைத்துவிடுகிறது..

உன்னிடம் நான் எதையும்
எதிர்ப் பார்க்கவில்லை...
உன்னையே எதிர்ப் பார்த்து காத்துகிடக்கிறேன்..

உன்னிடம் நான் பேசமாட்டேன்
ஆனால் என் நினைவுகள்
என்றாவது உன்னை அணைக்கும்..
அன்று என்செய்வாய் அன்பே..
அதுவரை காத்திருக்கிறேன்.

என்று வேண்டுமானாலும்
திரும்பி வா..
நான் காத்திருப்பேன்..
ஆனால் நான் உன்னையே
நினைத்து இருப்பதால்
என் உயிர் என்னிடம் இருக்குமா
என்பது மட்டும்
எனக்கு தெரியாது அன்பே...

நட்பு



எங்க வீட்டு மாடியில் படுத்து, வானத்தை பார்த்து இரவினை கழிப்பது என்பது, எனக்கு என் தாயின் மடியில் படுத்து கதைகள் கேட்கும் தருணம் போன்றது. பல சமயங்களில் நான் கவிதை என்ற பெயரில் கிறுக்க தொடங்கியதும் அங்கே தான்..

முகநூலை அனைத்து விட்டு புரண்டு படுத்த தருணம், மெலிதாய் எட்டி பார்த்தது ஒரு நினைவு. இங்க தானே அரவிந்த், தினேஷ் ரெண்டு பேரும் படுத்து இருந்தானுக, எத்தனை சந்தோசம் அன்றைய இரவு. லேசாய் சிரித்தும் கொண்டேன் அதற்கு அடுத்த நாள் நடந்தவற்றை நினைத்து...


வானத்தை பார்த்தால் முழு நிலவும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் இரவை பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.. மனதில் சின்ன ஆசை ஒன்று தோன்றியது அந்த நிலா போல நானும், நட்சத்திரங்களை போல என் நண்பர்களும் என்றும் என்னை சுற்றி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று..

இந்த உலகத்துல நான் பெருசா எதுவும் சாதிக்கல.., ஆனா எனக்கு கஷ்டம் வந்தப்ப எல்லாம் நான் கேட்காமலேயே எனக்கு உதவுற நண்பர்கள் எனக்கு கிடைச்சிருக்காங்க.. எனக்கு அது போதும் என்று அன்பு ஒரு இரவில் சொல்லியதும் இதயம் வருடி போனது அந்த நொடியில்...

பிறந்தவுடன் ஆரம்பம் ஆனதா.., இல்லை தவழ தொடங்கியதும் தொடங்கியதா.., இல்லை மழலை மொழியில் உறவாடிய உடன் என் நட்பும் முகேஷ் உடன் உறவாடியதா.. தெரியவில்லை, இன்று வரை தொடர்கிறது...


மதிய நேரத்து ஊரணி குள குளியல், சனி கிழமைகளில் புது ஆற்றில் குளியல், இடைவெளிவிடாத க்ரிக்கெட், இடைவேளைகளில் இனகவர்ச்சி காதல், திருட்டு தம் அடிக்க இருட்டும் வரை காத்திருத்தல், புகை வாடையை மறைக்க புளிய மர இலைகளை உதட்டிலும், விரல்களின் இடுக்கிலும் தேய்த்துக்கொண்ட அறிவியல், சொல்லாமலேயே கடந்து சென்ற அவனின் கண்மணி காதல்,அடுத்த வருடம் குழந்தையுடன் அவள் முகேஷ் நல்லா இருக்கியா..? என கேட்ட போது பதில் சொல்ல முடியாதநிலை என எவ்வளவு அழகான நாட்கள் டா நண்பா.. அது..


நட்பும், காதலும் எங்கே எப்படி உருவாகும் என்று கண்டுப்பிடித்து கூறும் அளவிற்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை.. ஒருத்தரை பார்த்ததும் பிடித்து விடுகிறது, அவரிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் பார்த்து வளர்வது காதல்.. சரியான நேரத்தில் நம் தவறை உணர்த்தி நம்மை திருத்துவது நல்ல நட்பு...

நான் டைட்டானிக் கதை (கதை... சரி விடுங்க.. சில பல முக்கியமான scenes)  சொல்லும் அழகை பார்த்து வளர்ந்தது நட்பு G.K.வினோத்துடன்...
முதன்முறையாக என்னை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு, தினந்தினம் புதிது புதிதாய் கதைகள் பேசி பழக ஆரம்பித்தோம்.. பருவத்தில் ஏற்படும் மாற்றம் முதல் பக்கத்து வீட்டு ஆன்டி வரை பேசாத விஷயங்கள் இல்லை.. என் முதல் காதலுக்காக (சரியா தெரியலங்க அப்படி தான் நினைக்கிறேன்..) நிறைய ADVICE பண்ணான். ஆனா நான் அவனை விட அவள ரொம்ப நம்பினேன், ஏமாற்றம் தான் கிடச்சது.. அதுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பல..

எங்கள மேலும் நெறுக்கம் ஆக்கினது கிரிக்கெட்.. ஊர்ல விளையாடும் போது நான் OPENING BATSMAN, ஆனா என்ன BOWLING போட வச்சு காமெடி பண்ணி.. அதனால சில பல மேட்ச் வின் பண்ணி.. உன்ன என்னால மறக்கவே முடியாது நண்பா...


ராஜராஜன்... ஒரு நாள் ரொம்ப பவ்யமா பக்கத்துல உட்கார்ந்து


நீ ஆலக்குடியா..? இல்ல பூதலூரா..னு கேட்டான்..


பூதலூர் டா ஏன் கேக்குற.. னு நான் கேட்டேன்..


இல்ல ராதிகாவ தெரியுமா..? தயங்கி தயங்கி கேட்டான்..


நல்ல தெரியும் டா.. அவ என் FRIEND தான் டா.. ஏன் டா அவட்ட எதுவும் பிரச்சனையா..


அவள எனக்கு பிடுச்சிருக்கு டா...


டேய்.. என்ன டா சொல்ற.. சரி விடு நான் அவட்ட சொல்லிக்கிறேன்.. னு சாதாரணமா அப்ப சொல்லிட்டேன்.. பின்னடி தான் தெரிஞ்சது அது எவ்ளோ பெரிய கஷ்டமான வேலைனு..


நான் அவன் காதல சொல்ல போனா அவ அவ காதல தூக்கிக்கிட்டு என்ட வரா.. நான் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவ புயல் அடிக்கிற மாதிரி ஆரம்பிச்சு, அழுது, என்னயும் அழ வச்சு, என்ன பேசவே விடாம அப்பிடியே போயிட்டா.. அது காதல்னு எனக்கு அப்ப புரியல.. திரும்ப அவளுக்காக காத்திருந்தேன் எப்படியாச்சும் ராஜா லவ்வ சொல்லிடனும்னு.. வாய்ப்பே கிடைக்கல..


இப்பவும் ட்ரையின் ல போகும் போது SECOND CARRIAGE 16 NUMBER SEAT பாத்தா அவ ஞாபகம் வராம இருக்காது.. அவ எப்பவும் உட்காற SEAT NUMBER தான் அது..


ஒரு முக்கோண காதல் கதையா.. நட்பின் முகம் உடைச்சு போச்சு.. புரியாத பறுவக்காதல்.. அவன் காதலை சொல்லாதத்திற்க்காக ராஜாவிடமும், அவளின் காதலை புரிந்துக்கொள்ளாதத்திற்காக ராதிகாவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..


என் தமிழ் ஆசான் திரு.ஐ.ஆரோக்கிய சாமி ஐயா.. தமிழை ஒரு காதலியை ரசிப்பது போல எனக்கு ரசிக்க கற்றுக்கொடுத்தார். கவிதைகள் மேல் நாட்டம் வர ஆரம்பித்தது.. குமுதத்தில் வரும் கவிதைகளையும், கதைகளையும் வாசித்து வந்து ஒரு மேடைப் பேச்சாளனிடம் பகிர்ந்து கொள்வேன்.. பள்ளி முடிந்தவுடன் அவன் நட்பும் முடிந்து இருந்தது.. ஒரு நண்பர்கள் தினத்தன்று


ஹாய்.. டா.. கோபால் எப்படி இருக்க..? என கேட்ட போது


டேய்.. பாலா.. எப்படி டா.. என் நம்பர் கிடச்சது, எப்படி டா.. இருக்க..? என்ன பன்ற.., எங்க இருக்க.. னு.. சந்தோசத்துல தவிச்சு என்ன பேசவே விடாம.. அவன் நார்மலா வரதுக்குள்ள போதும் போதும் னு ஆக்கிட்டான்.. நண்பர்கள் தினத்துக்கு எங்களுக்கு கிடச்ச பரிசு தொலைந்துப்போன எங்கள் நட்பு..


இவன் கூட ஆறு வருசமா இருக்கேன்.. நான் இவனுக்கு எதுவுமே பண்ணது இல்லை என்றாலும்.. அவனோட எல்லா நிலையிலும் நான் இருந்து இருக்கேன்.. என்னோட LIFE CHANGER இவன். B.C.A முடிச்சுட்டு M.C.A பண்ணலாமா வேணாமா னு நான் தவிச்சபோது எனக்கு தெரியாம எங்க மாமாட்ட பேசி என்ன SATHYABAMA UNIVERSITY ல படிக்கவச்சு இப்ப கைல ஒரு வேலையையும் வாங்கி கொடுத்துட்டான்..


இவன் கூட இருந்தப்ப தான் அதிகமா சிரிச்சு இருக்கேன்..


அவனுக்கு நிறைய கஷ்டம் இருந்தப்ப கூட மத்தவங்கள சிரிக்கவச்சு.. சந்தோசபடுத்துவான்..


இவன் PHOTO காமிச்சா போதும்.. இவன முன்ன பின்ன சந்திக்காதவன் கூட தெரிச்சு ஓடிருவாங்க.. அந்த அளவுக்கு PHOTO பிரியன்.. எல்லாரும் புரிஞ்சு இருப்பாங்க டா.. அன்பு.. உன்ன பத்தி தான் சொல்றேன்..னு..


இவரு M.C.A DEPT கே செல்லப்பிள்ளை.., FRIENDSHIP DATABASE.., யாருக்கு எது பிடிக்குமோ அத மட்டும் தான் செய்வான்.., கோபம் வராது.., எதுக்கும் ஃபீல் பண்ண மாட்டான்,( ஒரு விஷயத்த தவிர..) வணக்கம் தல.. னு சொல்லிகிட்டே.. அவன அடிக்க செமையா ப்ளான் போட்டு கொடுப்பான்..,
எல்லாருக்கும் இவன பிடிக்கும்.. எல்லாருடைய சோக கதையும் இவன்ட்ட இருக்கும்... இவன்ட்ட பேசிட்டு இவன விட்டு பிரிஞ்சு வர மனசு இல்லாம எத்தனையோ நாள் தவிச்சிருக்கேன்..


I LOVE YOU DA DINESH…


என் சித்தப்பா ஒரு நாள் இப்படி friend friend னு அலையிரியே.. கஷ்டத்துல சொந்தக்காரங்க தான் ஹெல்ப் பண்ணுவாங்க தெரிஞ்சுக்கோ னு சொன்னார்..
அட போங்க சித்தப்பா.. அப்ப கூட இன்னொரு ஃப்ரென்ட் தேடி தான் போவேன்.. சொந்தக்காரங்கள சீண்ட மாட்டேன் னு சொல்லிட்டு வந்தேன்..


IF YOU FEEL SAD, BE RELAX, ONE FRIEND WILL COME TO WIPE YOUR TEARS AND SADNESS…


இப்படி பட்ட நண்பர்களை எனக்கு கொடுத்ததுக்காக இருக்கிறாறோ இல்லையோ.. அந்த கடவுளுக்கு நன்றி..


Sunday, 22 April 2012

சிறகின் நினைவுகள்..

எங்களுக்கு பிடித்த தமிழ்ச்செல்வி mam காக இந்த கவிதை...




எங்கெங்கிருந்தோ
சின்னஞ்சிறிய பறவைகள்
கொண்டு வந்து விடப்பட்டன
ஒரு பெரிய சரணாலயத்தின்
சின்னஞ்சிறிய கூட்டில்...

கண்ணில் மிரட்சியுடனும்,
நெஞ்சில் கலக்கத்துடனும்
சிநேகம் வளர்க்க
சுற்றி முற்றி பார்த்தது
சின்னஞ்சிறிய பறவை ஒன்று...

தாய்மொழி தவிர
பிறமொழி அறிந்திராத தயக்கம்.
தனக்கு தெரிந்த
அரைகுறை ஆங்கிலத்தில்
விலாசம் விசாரித்தது
விசால பார்வையுடன்...

ஜார்க்கண்ட் என்றது ஒன்று
பீகார் என்றது மற்றொன்று
பாண்டிச்சேரி பாஸ் நீங்க
என்று எதிர் கேள்வி இட்டது ஒன்று
தஞ்சாவூர் என சொல்லிவிட்டு
மறுதிசை திரும்பியதும்
கேள்விக்காக பொறுத்திராமல்
இங்கேயே தான்
சிங்கார சென்னை என்றது ஒன்று
நமக்கு நாமக்கல் என்றது மற்றொன்று..

ஒவ்வொரு பறவையும்
ஒவ்வொரு விதம்
புறப்பட்ட இடத்தினால் மட்டும் அல்ல..

அடக்க நினைக்கும் ஒன்று
எனக்கென்னவென்று திரியும் மற்றொன்று
புலம்பி திரியும் ஒன்று
புரிந்து குழப்பும் மற்றொன்று
பேசியே கொல்லும் ஒன்று 
பேசாமலேயே கொல்லும் மற்றொன்று
கவனம் சிதறாமல் ஒன்று
கனவே உலகம் என்று மற்றொன்று
கூட்டில் நாயகனாக துடிக்கும் ஒன்று
அது அசிங்கப்படும் தருணங்களை
கூட்டத்தில் ரசிக்கும் மற்றொன்று
சுற்றத்தை கலாய்த்து கலகலப்பாய்
வைத்திருக்கும் ஒன்று
சோகமே திருவுருவாய் சோம்பி போய்
மூலையில் உறங்கி கிடக்கும் மற்றொன்று
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் ஒன்று
என்ன திட்டினாலும்
இன்னைக்கி சிக்கன் பிரியாணியா மச்சான்
என கேட்கும் மற்றொன்று

அத்தனையையும் அரவணைத்தது
இரு சிறகுகள்.
சிறகை விரிக்கவும்
உணவை கொறிக்கவும்
அது கற்று கொடுத்தது..

எந்த ஒரு தருணத்திலும்- அது
எங்களை விட்டுக்கொடுத்ததேயில்லை
நாங்களும் யாருக்காகவும் அதை
விட்டு கொடுக்கவில்லை..

தடுமாறி விழுந்தோம் சில சமயம்
தட்டி கொடுத்தது அந்த சிறகு..
ஏன்.. என்னாச்சு.. என
அது கேட்கும் போதே
மனசு குறுகுறுக்கும்,
அடுத்த வெற்றிக்கு
அஸ்த்திவாரமாய் அது அமையும்..

வெளி உலகில் எங்களை விட்டு
எங்கள் திறமையை
சோதித்து பார்க்க சொன்னது..
முதல் பரிசு பெற்று திரும்பியவுடன்
எங்களைவிட அது அதிகம் கர்வம் கொண்டது..
என் பசங்க prize won பண்ணி இருக்காங்க
என்று முகத்தில் மலர்ச்சியுடனும்
கண்ணில் பெருமிதத்துடனும்- அது
சொல்லிய தருணத்தை
புகைப்படம் எடுக்க தவறிவிட்டோம்- ஆனால்
நெஞ்சில் புதைத்து வைத்துகொண்டோம்..

சிறகை விரிக்கும் காலம் வந்தது
அனைத்து சிறு பறவைகளும்
அழகாய் பறக்க தொடங்கிவிட்டன..
சில பறவைகள்
விண்ணை தாண்டி
விண்வெளி தொடவும் தயாராகிவிட்டன..

இனி அந்த அரவணைத்த சிறகிற்கும்
கூட்டிற்கும்
சரணாலயத்திற்கும்
தொடர்பில்லை என்ற போது
சிறகில் சுமை வைத்தது போல் ஆகிற்று..

பறவைகள் கண்ணீர்
சிந்துவது இல்லையாம்- யார் சொன்னது
இங்கே வந்து பாருங்கள்
நாங்கள் கண்ணீர் சிந்துவதை..


என்றும் உங்கள்
மறவா நினைவுகளுடன்
நானும்
என் நண்பர்களும்.. .



















Monday, 9 April 2012

யாழிக்கு கவிதைகள்

எப்ப பார்த்தாலும் கண்ணாடி முன்னாடி
அப்படி என்ன தான்டா செய்வ..
ஆத்திரமாய் கேட்டார் அப்பா...
அவருக்கு எப்படி தெரியும் 
நான் கண்ணாடியில் பார்ப்பது 
என்னை அல்ல உன்னை என்று..

Friday, 6 April 2012

தேவதைகளின் தேவதை


தபுசங்கர்

அவருடைய வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்... கவிதை தொகுப்பை ஒரு பயணத்தின் போது என் நண்பன் அன்பு எனக்கு அறிமுகப்படுத்தினான். ஒவ்வொரு கவிதையையும் திரும்ப திரும்ப படிக்கும் போது, நான் காதலிக்காத போதும் அந்த உலகிற்குள் என்னை நுழைத்து ஆட்டிவைத்த காதல் மந்திரக்கோல் அந்த கவிதை தொகுப்பு...

என்ன மனுஷன் டா அவன்.., எப்படி எல்லாம் ரசிச்சு இருக்கான்..
அவன் மனுஷன் டா எப்படி ரசிச்சு இருக்கான் பாரேன்..
நிறையமுறை இப்படி எல்லாம் வியந்தது உண்டு...

நான் கவிதை என்ற பெயரில் எதையோ எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்..
இவரை போல எழுத நினைத்து எழுதியவை ஏராளம். ஒன்று கூட அப்படி வந்ததாய் தோன்றவில்லை..


தேவதைகளின் தேவதை இதுவும் ஒரு காதல் மந்திரக்கோல்..
காதலித்து கொண்டே இருங்கள்...


http://www.eegarai.com/ebooks/books/devathaikalindevathai.pdf

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்.. கவிதை தொகுப்பிலிருந்து..


எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

நீ வருவதற்காவே காத்திருக்கிறேன்
என்னை கடந்து போவதற்காவே வருகிறாய்


அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன


நீ நடந்து போன சுவடின்றி
அமைதியாக கிடக்கிறது
சாலை
அதிவேக ரயிலொன்று கடந்துபோன
தண்டவாளம் போல் அதிர்கிறது
என் இதயம்