உன்னுடன் பகிர்ந்துக் கொள்ளப்படாத
என் நினைவுகள் எல்லாம்
தரை எங்கும் சிதறி கிடக்கின்றன..
ஆனி மாதத்து வேப்பம் பூக்களாய்...
என்றாவது ஒரு நாள்
நீ என்னை நலம் விசாரிப்பாய்
என்ற நினைவே
என்னை சிதைத்துவிடுகிறது..
உன்னிடம் நான் எதையும்
எதிர்ப் பார்க்கவில்லை...
உன்னையே எதிர்ப் பார்த்து
காத்துகிடக்கிறேன்..
உன்னிடம் நான் பேசமாட்டேன்
ஆனால் என் நினைவுகள்
என்றாவது உன்னை அணைக்கும்..
அன்று என்செய்வாய் அன்பே..
அதுவரை காத்திருக்கிறேன்.
என்று வேண்டுமானாலும்
திரும்பி வா..
நான் காத்திருப்பேன்..
ஆனால் நான் உன்னையே
நினைத்து இருப்பதால்
என் உயிர் என்னிடம் இருக்குமா
என்பது மட்டும்
எனக்கு தெரியாது அன்பே...
Aani mathathu vepam pookam aani ku 3suli na varum da
ReplyDeletena correct than machi...
Deletemachi super huh iruku da but last para la etho feel konjam kami agura mari iruku machi
ReplyDeletethanks machi.. enakkkum apdi than thonuchu mach..
ReplyDelete