Friday, 11 May 2012

இரவு


அர்த்த ராத்திரியில்
அர்த்தமற்று வீதிகளில் திரிவது
எனக்கு பிடித்திருக்கிறது..

திடுக்கிட்டு விழித்து
குறைத்த நாய்களும்,
இன்று எனக்கு துணையாக
நகர்வலம் வருகிறது..

எனக்கென்று இருக்கும்
இந்த தனிமையில்
எனை கேள்வி கேட்க யாருமில்லை...

காதலியின் கண்ணீர் துளிகள் இல்லை..
நட்பின் நச்சரிப்பு இல்லை..
உறவின் உருத்தல் இல்லை..
துளி நீரில் இமை எரிக்கும்
நினைவுகள் இல்லை..
நான் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
புனிதமடைகிறேன்..
மனிதம் அறிகிறேன்..

என் இரவுகளில் பல- இப்படியே
கடந்தும் கலைந்தும்
செல்கின்றன..
காரணமும் தெரியவில்லை..
கவிதையும் புரியவில்லை.. –ஆனால்
அர்த்த ராத்திரியின்
அசட்டுதனங்கள் மட்டும் குறையவேயில்லை..

2 comments: