Friday, 18 May 2012

கவிதை கதை


காதல் வேறு
காமம் வேறு..
காதல் வேறு
நட்பு வேறு..

ஆண் பெண் பேசுவதே
தவறாகும் தேசத்தில்
நட்பு என்ன..?
உறவு என்ன..?
காதல் என்ன..?
கத்திரிக்காய் என்ன..?

கண்கள் சுழற்சி..
வயதின் கவர்ச்சி..
ஹார்மோன் கிளர்ச்சி..
மனதின் வீழ்ச்சி..
எகிறும் உணர்ச்சி..
காதல்.

தினமும் கண்கள்
காண விரும்பும் காட்சி
அவள் முகமே..

அன்பின் எல்லை நட்பு..
நட்பின் எல்லை காதல்..
காதலின் எல்லை காமம்..
காமத்தின் எல்லை..

எல்லைகள் விரிந்தாலும்
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்
எல்லா நிலைகளிலும்..

முதல் பார்வை
பார்வையில் பரவசம்
ஆதலால் பழக்கம்

சின்னதாய் பேச்சு
கண்களில் வீச்சு
மனம் மாறியாச்சு
இருவருக்குள்ளும் என்ன ஆச்சு?

நட்பின் எல்லையை
விரைவில் அடைந்தாலும்
கடக்க முடியவில்லை
மனதின் குழப்பத்தால்..

நட்பு
மெள்ள மெள்ள
நகர்ந்து
காதலுக்குள் நுழைவதை
ஏன் எவரும்
ஏற்க மறுக்கின்றனர்..?

ஊர் ஏசுமோ..?
உறவுகள் ஏசுமோ..?
ஆயிரம் ஆயிரம் தயக்கம்
காதலை சொல்ல..

காதலில் நட்பு இருக்கலாம்- ஆனால்
நட்பில் காதல் இருக்கக்கூடாது.
விந்தை உலகம் இது..

அவளிடம்
சக மாணவன் பிறந்தநாளில்
தன் காதலைக் கூற
கொண்டாட்டம் அடங்கியது
அவள் விட்ட அறையில்..

பல முறை
பல சந்தர்ப்பங்களில்
பல கோணங்களில்
சிரிக்க சிரிக்க
அவள் விவரித்ததை
எப்படி மறக்க முடியும்..?

அவன் காதலிக்கிறான்
ஆனால் அவள்.?

அவளும் காதலிக்கிறாள்
உருகுகிறாள்
அன்பு பாராட்டுகிறாள்
அவனை போலவே
தயங்குகிறாள்
யோசிக்கிறாள்
தவிக்கிறாள்

அவன் விடுபடுவதாய்
தெரியவில்லை
தவிப்பின் சிறையிலிருந்து..
இவள் போட்டு உடைத்தாள்
இன்னும் எத்தனை நாள் தான்
உன்னை நானும்
என்னை நீயும்
ஏமாற்றிக்கொண்டே
இருக்க போகிறமோ..?

காதலை சொல்ல
புரிதலை சொல்ல
இதைவிட சிறந்த வரிகள்
இருப்பதாய் தெரியவில்லை அவளுக்கு..

அவள் சொன்னதும்
அவன் அங்கம் புகுந்தது வெட்கம்.
வெட்கம் இயல்பானது தான்
ஆனால் அதை
பெண்ணுடமையாக்கி
போக்குக் காட்டிவிட்டது சமூகம்.

வேதனைக்கும்
தவிப்பிற்கும்
இன்று தான் விடுதலை என்றான்.

ஆசையாய் கேட்டான்
திருமணம் எப்போது..?

அதற்குள் அவனது
எண்ண ஓட்டம்
அவளின் பதிலை நோக்கி
பதிலின் பொருளை நோக்கி..

இப்பவே என்றால்
நம்மீது சந்தேகம்
என்று எண்ண தோன்றும்

கொஞ்ச நாள்
சென்ற பிறகு என்றால்
நண்பனா.. OK
ஆனா லவ்வரா..
யோசிப்பதாய் தோன்றும்..

பிறர் மனதை புரிந்து
வலிகள் இல்லா
வேதனையில்லா
வார்த்தைகள் தருபவர்
கடவுளுக்கு நிகரானவர்.

அவள் கூறினாள்
எப்ப வேண்டுமென்றாலும்..

வீடு என்ன
உலகமே எதிர்த்தும்
திருமணம் செய்தார்கள்
பதிவு அலுவலகத்தில்..

அவள் முடிவு செய்தாள்
பையனோ..
பொண்ணோ..
காதல் மட்டும் வேண்டாம்
ஆல்பத்தை புரட்டும்
அல்ப சந்தோசம் கூட கிடைக்காது
என்று கூறி காதலை தடுக்க..

No comments:

Post a Comment