உன் சிறுமுதல் பார்வையால்
முதல் மழை என் மனதில்..
இதுவரை யாரையும்
காதலித்தது இல்லை என்றாய்...
முதல்முறையாக உன்னை
காதலிக்கத் தொடங்கினேன் நான்..
நீயும் நானும்
எதிர்பாராத நொடியில்,
சொல்லிவிட்டேன் என் காதலை..
பொறுத்திருக்க சொன்னாய்..
நான் உன்னை
வெறுத்திருந்தேன்..
காத்திருக்க சொன்னாய்..
நான் கரைந்து போய் நின்றேன்..
சின்னச்சின்னதாய்..
முத்தங்கள் தந்து,
அப்படியே அணைத்து நின்றாய்..
என் கோபங்கள் மறைந்து
உறைந்து நின்றேன்..
அறை மனதாய்..,
மனதை அடக்கம்
செய்ய சொன்னாய்..
அடுத்த வினாடியே
உன்னை நினைத்தேன்..
நீ எனக்கில்லை..
நீ எனக்கில்லை என்றாய்..
என் காதலை
வளர்த்துக் கொண்டே
சென்றேன் நான்..
உன்னுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும்
நண்பா என்கிறாய்..
சிரிப்பதா.. அழுவதா..
என தெரியாமல்
இரண்டையும் செய்துவிட்டு
பிரிகிறேன் நான்..
நீ இருந்தாய்
அது போதும்...
nama level ku antha ponnu velaiku agathu soniye antha ponna da
ReplyDeleteunna mind la vachu irukken machi..
Delete