Tuesday, 25 September 2012

கனவுகள் இனிக்கட்டும்.....


ஏன்டா இப்டி பித்துபிடிச்சவன் மாதிரி உக்காந்து இருக்க...?

சீரியஸ்னெஸ்னாலே என்னனு தெரியாதவன் வாழ்க்கைல சீரியல் கில்லரா அவ நினைவுகள் மச்சி. ஒரு நிமிசம் தான் அவள பாத்தேன் என்ன மறந்து திரியுறேன்டா.

அவ என்ன அவ்ளோ அழகா...!?

அப்டிலாம் ஒன்னும் இல்ல... வொயிட் ட்ரெஸ் போட்டுட்டு வந்தா தேவதை என்பவள் அவள போல இருப்பாடா...

அவ பேரு என்னடா...?

செல்லமா கூப்பிட என்ன பேரு வைக்கலாம்னு நானும் யோசிச்சேன். எந்த பேரும் அவ அளவுக்கு அழகா இல்ல, அதனால நீ பேர் இல்லாமலயே இருந்துட்டு போனு விட்டுட்டேன்.

அவள எங்கடா பாத்த..?

சித்திரை மாத நிலவுல காவிரி ஆத்து மணல்ல கண் அசந்த நேரம். பக்கத்துல இருந்தும் தொட முடியாத தூரத்துல...

ஓ.. கனவுலயா... அவள எப்புடிடா இங்க தேடுவ...?

ஆமால்ல... அப்போ எனக்கு இந்த உலகமே வேணாம். நான் கனவுலயே இருக்கேன்.

கனவுகள் இனிக்கட்டும்.....

No comments:

Post a Comment