Monday, 8 October 2012

யாழிக்கு கவிதைகள்

அழியும் உடல்
அழியாத காதல் மேல்
கொண்ட காதல் தான்
காதல்...

Sunday, 7 October 2012

யாழிக்கு கவிதைகள்


நீ சொல்ல வந்து
மறைத்து சென்ற
மௌணத்தை போலவே
என்னை கடந்து செல்கிறது
நம் காதல்...

Friday, 5 October 2012

காதல் பேருந்து கழகம் ( LTC )


கால்கள் நோக காத்துகிடந்தேன்,
காலை நண்பகலாய் ஆன போதும்
காத்திருந்த பேருந்து வரவில்லை.
அங்கு இருந்ததிலேயே
நீ தான் அழகு என்பதால்
உன்னை ரசித்திருந்தேன்.
அது பொருக்கவில்லை
எங்கிருந்தோ வந்துவிட்டது பேருந்து.

எனக்கு ஏறவே மனமில்லை,
ஏதோ நீ ஏறுகிறாய்
என்பதால் நானும் ஏறினேன்.

“படியில நிக்காத...”
“வழி விடும்மா...”
“எங்க போறிங்க...”
இந்த சத்தமெல்லாம்
எங்கிருந்து கேட்கின்றன...,
பேருந்தில் நீயும் நானும் மட்டும் தானே இருக்கிறோம்.

அட.., பேருந்து ஜன்னல் கம்பியில்
வழிந்து நிற்கும் நீர்த்துளி கூட
இன்று அழகாய் தெரிகிறதே...
ஒருகணம் நீ துடைத்து எறிந்த
வியர்வை துளியோ என நினைத்துவிட்டேன்.

வேகமாய் செல்வது போல்
பாவனை காட்டி
மெதுவாய் செல்லும் பேருந்தை போல்
எத்தனை அழகாய் நடிக்கிறாய்...,
என்னை பார்த்தும் பார்க்காதது போல...

திருட்டுத்தனமாய் என்னை ரசிப்பதில்
கொள்ளை பிரியம் உனக்கு...
எந்த குழந்தைக்கு தான் பிடிக்காது
ஜன்னல் ஓர சீட்டும்,
பின்னால் செல்லும் மரங்களும்...

வழக்கம் போல இன்றும்
உரைத்துவிட்டேன் என் காதலை,
எப்போது கேட்டாலும் சில்லறை இல்லை
என சொல்லும் நடத்துனர் போலவே
இன்றும் மறுத்து செல்கிறாய் நீ...

Tuesday, 2 October 2012

பிரதமர் ஐயாவுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்


காந்தி, காமராஜர், சுபாஷ், பகத், பாரதி என வீரர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இல்லை. ஆனால் உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிந்தது. இன்று தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ளது ஆனால் உண்மையான போராட்ட வீரர்கள் யாரும் இல்லை. புரட்சி எனும் உணர்ச்சி சுபாஷுடன் மர்மமாய் மறைந்துவிட்டதா இல்லை கல்லறையில் காந்தியுடனே புதைக்கப்பட்டு விட்டதா...,  என்னிடம் பதில் இல்லை.

இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சை போராட்டம், கவனத்தில் கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்... இவை எல்லாமே ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவை தான். ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை பார்த்த மூத்த பத்திரைக்கையாளர் திரு.குல்தீப் நய்யாரின் வார்த்தைகள்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய அரசோ அடக்குமுறையை கையாண்டு எங்களை அடக்குவதிலியே குறியாய் இருக்கிறது. மன்மோகனின் அரசியல் சூத்திரமே தனி, ஒரு பிரச்சனை கிளம்பினால் மௌணம் சாதித்து அதை கிடப்பில் போடுவது, அதையும் மீறி பிரச்சனை தலையெடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவிப்பு, அதற்கு மேலும் பிரச்சனை அடங்கவில்லையா இருக்கவே இருக்கிறது வால்மார்ட்டும், பெட்ரோல் டீசல் விலையேற்றமும் கிளப்பிவிடுங்கள் அதை மற்றவை தானாய் அடங்கிவிடும்.

மன்மோகனின் சதுரங்க ஆட்டத்தின் வெற்றிக்கு துணையாக இருப்பதே எதிர்க்கட்சிகள் தான். எதிர்ப்பை வளுவாய் வைக்காததே மன்மோகனின் தொடர் நகர்த்தலுக்கான ஆதரவை வளுவாய் தருகிறது, கூட்டணி கட்சிகள் கூட இப்படி ஒரு ஆதரவு தருவதில்லை. கருப்பு பண விவகாரமும், விலைவாசி ஏற்றமும் பாராளுமன்றத்தை முடுக்கவதற்காக மட்டுமே பயன்ப்படுத்துகிறது. அதை மக்கள் போராட்டமாக மாற்றி, மக்களை போராட வைப்பதும் இல்லை, தப்பித்தவறி மக்களே போராடினாலும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தந்து வளு சேர்ப்பதும் இல்லை. செயல்படாத அரசு மட்டும் இல்லை, செயல்படாத எதிர்க்கட்சிகளும் இருப்பதால் தான் இந்த நிலைமை.

கூட்டணி கட்சிகளை பற்றிய என் சிறிய கருத்து அவர்கள் பச்சோந்திகள். அதுவும் தமிழக கட்சிகள் ஒப்பீடு செய்வதற்கு கூட முடியாத தரம் கெட்ட நிலைமையில் இருக்கிறது. கூட்டணியில் இருந்து கொண்டே கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தது அவர்களின் தரத்திற்கான அக்மார்க் சான்று. தாமதமாய் சொரணை வந்தாலும் மம்தா எவ்வளவோ பரவாயில்லை. முலாயம் சிங்கிற்கும், கருணாநிதிக்கும் என்று வரும் என்று தான் தெரியவில்லை. அவர்களுக்கு வரப்போவதும் இல்லை.

மன்மோகன் அப்பிடி என்ன சார் பண்ணிட்டார்னு கேக்குறீங்களா... அவர் எதுவுமே பண்ண மாட்டேங்குறார் சார் அதான் பிரச்சனையே...
மத்திய அரசு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என ஒரு நீதிபதியும், மத்திய அரசை நினைத்தாலே BP ஏறுகிறது என மற்றொரு நீதிபதியும் நீதிமன்றத்திலேயே உரைக்கும் அளவில் உள்ளது அவரின் செயல்பாடு. மன்மோகனும், சிதம்பரமும் நாங்கள் நல்லவர்கள் என்று சொன்ன போதெல்லாம் நான் நம்பவில்லை, நிலக்கரி ஊழல் விவகாரத்தை எதிர்க்க திராணியில்லாமல் வால்மார்ட்டை கிளப்பிவிட்ட போதுதான் அவர் நல்லவர் என நம்ப துணிந்தேன். நல்லவர் தான் நம்புங்க அவரின் சாதனைகளில் சில இதோ...

உலகில் இதுவரை தொடமுடியாத உச்சம் 76000 கோடி நிலக்கரி ஊழல். ராசா கொஞ்சம் கம்மினு கருணாநிதி பெருமை பட்டுக்கொள்ளலாம்.

சுகாதார குறைப்பாட்டால் இறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் என ஐ.நாவின் கண்டணம். உகாண்டாவில் கூட நம்மை விட கம்மியாம்.

வால்மார்ட் தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு சரி என்பது தலைசிறந்த இரு பொருளாதார நிபுணர்களின் கருத்து. வால்மார்ட் அல்ல அது வாலில் தீ என்பது கமலஹாசனின் கருத்து. எது சரியென்று புரியவில்லையா... 200 வருடம் பின்னோக்கி சென்று கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றை திருப்பி பாருங்கள் புரியும்...

ஈழத்தமிழர்களின் கொலைக்கு உடந்தை மற்றும் தமிழர்களுக்கு செய்த, செய்யும் துரோகம்.

70% சதவீத மக்களுக்கு கழிவறை இல்லை. திட்ட கமிசன் குழு தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவின் கழிவறையை சரிசெய்ய 70 கோடி செலவு செய்துள்ளது மத்திய அரசு.

இது பரவாயில்லை, 1040 கோடி கடந்த ஆண்டு சோனியாவின் உடல் நலத்திற்கு செலவு செய்துள்ளது. யார் வீட்டு காச யாருங்க செலவு பண்றது. சோனியா காந்தி என்ன இந்நாட்டின் பிரதமரா, இல்லை குடியரசு தலைவரா. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தானே, அவரும் எங்களுக்கு சமம் தானே அப்போ எங்களுக்கும் அந்தளவிற்கு தொகை ஒதுக்குமா மத்திய அரசு. ஒதுக்கியிருந்தா ஏங்க ஐ.நா கண்டிக்குது. சரி சோனியாக்காக தான் நீங்க பிரதமரா இருக்கீங்கனா எதுக்குங்க இந்த பதவி தூக்கி எறிஞ்சுட்டு போங்க சார். மானம் உள்ளவன தெய்வமா பாப்போம் நாங்க.

காஷ்மீர் பிரச்சனைய விட, காவிரி பிரச்சனை பெரிதாகிவிடும் போல...
நமக்கு இதெல்லாம் தேவையா... வாங்க K.F.C ல போயி பக்கெட் சிக்கென் சாப்பிடுவோம். இல்லன்னா வாங்க காந்தி ஜெயந்தி அன்னைக்கு நித்தியானந்தா பேட்டியாம் அதையாவது பாப்போம்.

 என்னங்க காந்தி ஐயா பண்றது, உங்கள பத்தி எழுதலாம்னு தான் ஆரம்பிச்சேன். ஆனா எங்களுக்கு நீங்க எவ்ளோ தேவை என்பதை பத்தி எழுத வேண்டியதா போச்சு. சுதந்திரம் வாங்கி தந்த கட்சி என்னும் போர்வையை இன்னும் உபயோகிக்க முடியாது. அந்த கட்சிக்கு எதிரான சுதந்திர போராட்டம் விரைவில் எழும் இந்தியாவின் மிக மோசமான பிரதமர் அவர்களே... 

Sunday, 30 September 2012

inbox


விஜய், அஜித்தை எல்லாம் கலாய்க்கிற மெஸ்ஸேஜ் அவங்களுக்கு போகுமா, போகாதா...

நண்பன் பர்த்டேக்கு விஷ் பண்ண நைட் 12மணிக்கு கால் பண்ணேன். நீ ஏன்டா கால் பண்ண என் ஆளு தான் ஃபர்ஸ்ட்டு விஷ் பண்ணனும்னு நினைச்சு இருந்தேன்டா என சொன்னான். அன்றிலிருந்து அவன் பர்த்டேக்கு விஷ் பண்றதயே விட்டுட்டேன்.

சச்சின் செஞ்சுரி அடிச்சா யாரு ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவாங்க...

ஹல்லோ...
ஹெல்லோ...
அண்ணே.., அரிசி வந்துருச்சாண்ணே,
இல்லையேப்பா...
எப்பண்ணே வரும்...
தெரியலியேப்பா...
விளையாடதிங்கண்ணே...
நான் இப்ப தான்பா விளையாடவே போரேன்...
கால் கட்.., ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதே நம்பரில் இருந்து மீண்டும் அழைப்பு.
ஹல்லோ ராங்க் நம்பர்னா சொல்ல வேண்டியது தானே...
சரி ராங்க் நம்பர்னு சொல்லி கால்ல கட் பண்ணிட்டேன் பாவம் மனுசன் என்னென்ன சாபம் விட்டானோ...

இந்த பொண்ணுங்க எப்படி தான் இவ்வளவு ஸ்பீடா மெஸ்ஸேஜ் அனுப்புறாங்கனே தெரியலப்பா...
தலவலிக்குதுனு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்புனேன்...
ஏன் நேத்து சரக்கு அடிச்சியா...?
என்ன லவ் பண்றியா இல்லையா...?
நான் எது சொன்னாலும் கேக்க மாட்டியா...?
ஃபர்ஸ்ட் மெஸ்ஸேஜ்க்கு ரிப்ளே அனுப்புறதுக்குள்ள இத்தன மெஸ்ஸேஜ் வந்தா நான் எதுக்கு ரிப்ளே பண்றது... எதுக்கு வம்புனு ரிப்ளே பண்ணாமலேயே விட்டுட்டேன்.
நான் எது கேட்டாலும் சொல்ல மாட்டல...? I hate you…
இதுக்கு மட்டும் ரிப்ளே பண்ணேன் thank you…

ஒரு விருந்துக்கு நானும் என் அண்ணனும் ஒன்றாக ஒரு பேருந்தில் சென்றோம். அவன் டிக்கெட் எடுப்பான்னு நான் இருக்க, நான் டிக்கெட் எடுப்பேன்னு அவன் இருக்க, கடைசில ரெண்டு பேருமே டிக்கெட் எடுக்கல... கரெக்ட்டா வந்தானுக மாப்பிள்ளைங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டோம். அப்போ தான் வந்துச்சு ஒரு மெஸ்ஸேஜ், “என்ட ஜேஞ்ச் இல்ல நீ டிக்கெட் எடுத்துடு”னு எங்க அண்ணன் ஏறுன உடனே அனுப்புன மெஸ்ஸேஜ்.

அமெரிக்கா போயிட்டு வந்த நண்பனின் பார்ட்டி. ஃபாரின் சரக்கு என்பதால் காலைலியே பார்ட்டி. நம்ம சென்னை ட்ராஃபிக் பத்தி தான் தெரியுமே அதுவும் பஸ்ல போயிட்டு இருந்தேன். எங்கடா இருக்க...?, எங்கடா இருக்க...?னு கால் பண்ணிக்கிட்டே இருந்தானுக.
மச்சான் இந்தா சோழிங்கநல்லூர் வந்துட்டேன்டா, இன்னும் பத்து நிமிஷத்துல கேளம்பாக்கம் வந்துடுவேன்.
பெருங்குடி எறங்க வேண்டியிருக்கா... பெருங்குடி பெருங்குடி...
கண்டக்டர் அண்ணே ஏன்ணே...?

கண்ணிரண்டும் மூடி தொலைப்பேசி சுழற்றுங்கள்
எதிர்முனையில் எவர்வரினும் அன்றைய விருந்துக்கு அழையுங்கள்.
-    பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பில் வைரமுத்து.

ஒரு நாள் போரடிக்குதே நாமளும் ட்ரை பண்ணி பாப்போம்னு ஒரு நம்பருக்கு கால் பண்ணேன். இங்க்லீஷ் படம் நிறையா பாத்து இருப்பா போல, செமையா திட்டிவிட்டா, அதுலயும் ஒரு வார்த்தைக்கு மீனிங்க் கண்டுபிடிக்கவே எனக்கு ஒரு வாரம் ஆச்சு...
மன்னிச்சுடுங்க வைரமுத்து சார் அந்த கெட்ட வார்த்தைய யூஸ் பண்ணி உங்களயும் திட்டிட்டேன்.

நெடு நாட்களுக்கு பிறகு தோழியின் அழைப்பு, N-ல் ஆரம்பிக்குமாறு அவள் குழந்தைக்கு பெயர் சொல்ல சொன்னாள். நறுமுகை, நிறைமதி என பரிந்துரை செய்தேன். அவர்களுக்கு நறுமுகை என்ற பெயர் பிடித்துவிட்டது. நறுமுகை – நறுமணம் மிக்க புதிதாய் மலர்ந்த மலர். அழகிய தமிழ் பெயர்கள் நிறைய இருக்க எதற்கு புரியாத மொழிகளில் பெயர் வைக்க வேண்டும்.

ஒன் நம்பர் ரிசீவ்டு!
சாலையில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவ நினைத்தால், 1098-க்கு போன் செய்யுங்கள். இது மட்டும் இல்லை... குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது, சிறார் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து தருவது எனக் குழந்தைகள் மீதான அனைத்து வகையான தீங்குகளுக்கு எதிராகவும் இந்த எண்ணுக்கு அழைத்து பேசலாம். அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்!
நன்றி :- ஆனந்த விகடன்.

Tuesday, 25 September 2012

கனவுகள் இனிக்கட்டும்.....


ஏன்டா இப்டி பித்துபிடிச்சவன் மாதிரி உக்காந்து இருக்க...?

சீரியஸ்னெஸ்னாலே என்னனு தெரியாதவன் வாழ்க்கைல சீரியல் கில்லரா அவ நினைவுகள் மச்சி. ஒரு நிமிசம் தான் அவள பாத்தேன் என்ன மறந்து திரியுறேன்டா.

அவ என்ன அவ்ளோ அழகா...!?

அப்டிலாம் ஒன்னும் இல்ல... வொயிட் ட்ரெஸ் போட்டுட்டு வந்தா தேவதை என்பவள் அவள போல இருப்பாடா...

அவ பேரு என்னடா...?

செல்லமா கூப்பிட என்ன பேரு வைக்கலாம்னு நானும் யோசிச்சேன். எந்த பேரும் அவ அளவுக்கு அழகா இல்ல, அதனால நீ பேர் இல்லாமலயே இருந்துட்டு போனு விட்டுட்டேன்.

அவள எங்கடா பாத்த..?

சித்திரை மாத நிலவுல காவிரி ஆத்து மணல்ல கண் அசந்த நேரம். பக்கத்துல இருந்தும் தொட முடியாத தூரத்துல...

ஓ.. கனவுலயா... அவள எப்புடிடா இங்க தேடுவ...?

ஆமால்ல... அப்போ எனக்கு இந்த உலகமே வேணாம். நான் கனவுலயே இருக்கேன்.

கனவுகள் இனிக்கட்டும்.....

Monday, 24 September 2012

INBOX


திங்க கிழமை காலைல அலார்ம் அடிச்சா, போன செவுத்துல அடிச்சு உடைச்சிருலாம்ன்ற அளவுக்கு கோவம் வருது...

உங்களுக்கு பிடித்த பாடல் பிடிக்காமல் போக வேண்டுமா, அத காலர் ட்யூனாக செட் பண்ணுங்கள்.

சாலையை கடக்கும் போதும், வண்டி ஓட்டும் போதும் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள், விபத்துகளுக்கான காரணிகளில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. முதலிடம் தலைக்கவசம் அணியாதது. இந்த இரு காரணிகளாலும் அதிகம் விபத்திற்குள்ளானது பெண்கள்.
- சமீபத்திய சென்னை மாநகராட்சியின் அறிக்கை.

ஏதோ கவிதன்ற பேர்ல ஒன்னு எழுதி கனவுகள் இனிக்கட்டும் என்று நண்பர்களுக்கு இரவுகளில் குறுஞ்செய்தி அனுப்புவது உண்டு. சிலசமயங்களில் வடஇந்திய தோழர்களுக்கும் அனுப்பிவிடுவேன். புரிகிறதோ இல்லையோ ஒருத்தன் மட்டும் கனவுகள் இனிக்கட்டும் என பதில் அனுப்புவான். தமிழ வளர்த்துவிட்ட திருப்தி.

ஆண்ட்ராய்டு போன்ல ஆண்ட்ரியா போட்டோவ வச்சாலும் நமக்கு கால் பண்ண போரது நம்ம ஊர் கிழவி தான். ஸ்மார்ட் போன் கேட்ட தம்பிக்கு சித்தப்பாவின் பஞ்ச். நல்ல வேள நான் அவர்ட்ட ஐடியா கேக்கல...

கிளம்பும்போது தவறுதலாக என் மொபைல் கீழே விழுந்து சிதற..., கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போடா, சகுனமே சரியில்லனு அக்கா சொன்னா... எப்படிடா டெக்னாலஜி வளர வளர மூடநம்பிக்கையையும் சேர்த்து வளக்குறீங்க...

எவன் எவனோ பந்த் நடத்துறான் இந்த செல்போன் கம்பனிகாரங்க ஒரு வாரத்துக்கு ஸ்டைரக் பண்ணா எப்பிடி இருக்கும் ஒரு வினோத எண்ணம்...
ஷங்கர் படம் மாதிரி பிரம்மாண்டமா நெனப்பு ஓடுது வார்த்தையில விவரிக்க முடில...

எனக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், எனக்கு பகல்ல கால் பண்ணவே மாட்டானுக..., ஆனா நட்டநடு ராத்திரில கால் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுக..., சாம்பிள்க்கு இதோ...
தூங்கிட்டியா...
இப்பதான்டா படுத்தேன் சொல்லிதொல...
அவ அம்மா முளிச்சுட்டாங்களாம் பத்து நிமிசம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்னா அதான் அதுக்குள்ள தூங்கிடகூடாதுல...
அதுக்கு எதுக்குடா எனக்கு கால் பண்ண...
எனக்கு உன்னவிட்டா வேற யாரு மச்சான் இருக்கா...
பத்து நிமிசம் கழிச்சு...
மச்சான் குட்நைட்னு மெசேஜ் அனுப்பிட்டா தூங்கிட்டானு நினைக்கிறேன், எனக்கும் தூக்கம் வருது. குட்நைட் மச்சி கனவுகள் இனிக்கட்டும்...
அதுக்கு அப்புறம் நீட்டி, மடக்கி, ஒருக்குணிச்சு, புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரேவே வராது...

இன்னும் மூணு நாளைக்கி மழ இல்ல, ஆனா மேகமூட்டம் இருக்கும் என அப்ளிக்கேசன பார்த்து வானிலை அறிக்கை சொன்னேன்
ஆமா..., ரமணன் சொல்லியே வாராத மழ இவர் சொல்லி வரபோகுதாக்கும், எலேய்.., நிலாவ சுத்தி பரிவட்டம் கட்டிடுச்சு நாளைக்கி ராத்திரிகுள்ள மழ வருதா இல்லையானு மட்டும் பாரு... சொல்லிவிட்டு வீராப்பா கடந்துபோனார் சித்தப்பா
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுனு முணகிகிட்டே படுத்தேன்.
விடுஞ்சு எழுந்து பாத்தா வீதியெல்லாம் வெள்ளம்...
சாட்டிலைட்டுகே சவால் விடுறாங்கபா நம்ம ஆளுங்க...

JP எனக்கும் அவருக்கும் எப்பவுமே செட் ஆகாது...
ஜாவால INHERITANCE -க்கு சாம்பிள் ப்ரோக்ராம் எழுதி போட்டுட்டு இருந்தாரு...
க்ளாஸ் னாலே என்னானு தெரியாது, இதுல சூப்பர் க்ளாஸ் வேறயா, எவனோ கமெண்ட் அடிக்க, சிரிச்சுட்டானுக முன்னாடி இருந்தவனுக..
க்ளாஸ்ல நமக்கு எதிரியே இவனுங்க தான் சிரிச்சே சிக்க வச்சுருவானுக..
அவர் திரும்புனதும் சிக்குனது நான் தான்...
ஏந்திரி இந்த சூப்பர் க்ளாஸ்க்கு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ணு...
எனக்கென்ன தெரியும் தலைய தொங்கபோட்டு நின்னேன்...
நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...
கடைசி ரோ ஃபுல்லா எழுந்திருச்சு நின்னுடுச்சு.., எவனுக்கும் தெரியல...
ஒரு மாசமா க்ளாஸ் எடுக்குறேன் ஒரு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ண தெரிலனா எதுக்கு நீங்கலாம் க்ளாஸ்க்கு வரீங்க... உச்சகட்ட கோபத்தில் ஏதேதோ திட்டினார்...
எனக்குள்ள இருந்த சிங்கத்த தட்ட்டி எழுப்பீட்டிங்க... அசோக்... உன் காலண்டர்ல குறிச்சு வச்சிக்கோ இந்த நாள் உன் வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்... உனக்கும் எனக்கும் தர்ம யுத்தம் ஆரம்பம் ஆயிடுச்சு....
கத்தி தொலச்சிடுச்சு, ஷூ சாக்ஸ்க்குள்ள ஒளிச்சு வச்சிருந்த என் செல்போன்.
ஒழுங்கா வெளில போயிடு..., இனிமே என் க்ளாஸ் பக்கமே எட்டி பாக்காத..., எதுவும் பேசாத வெளில போயிடு..., அதுக்கு முன்னாடி அவ்ளோ கோவமா நான் அவர பாத்ததேயில்ல,
பாவம் அவருக்கு ரஜினிய புடிக்காது போல இருக்கு...