அலைபாயுதே VS விண்ணை தாண்டி வருவாயா..
காதலுக்குள் சிறு சிறு ஊடல்களும் அதன் விளைவுகளும்தான் இந்த இரு திரைப்படங்களின் திரைக்கதை..
காதலை தக்க வைத்து கொள்ளும் தவிப்பு அலைபாயுதே...
காதலை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பு விண்ணை தாண்டி வருவாயா...
ரெண்டு படத்துலயும் ஹீரோ பேரு கார்த்திக் ஏன் னு தான் தெரில..ரெண்டு படத்துக்கும் மியூசிக் ரஹ்மான் சார்.. ரெண்டு படத்துக்கும் வெயிட் மியூசிக் தான்.. வேற யார்ட்ட கொடுத்து இருந்தாலும் சத்தியமா இந்த அளவுக்கு பெஸ்ட் ஆ வந்து இருக்காது..
"எவனோ ஒருவன்" அலைபாயுதே-வின் அழகு என்றால் "மன்னிப்பாயா" மனதை வருடும் மயிலிறகு..இரு திரைப்படங்களிலும் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றபோதிலும் எனக்கென்னவோ அலைபாயுதே பெஸ்ட் னு தோணுது ஏன்னா
வித்தியாசமான தருணங்களில் இடம் பெரும் பாடல்கள்.
"ஒருவேள காதலோ.."
"சும்மா பாத்தா காதல் வருமா.. பைத்தியகாரத்தனம்.."
"பின்ன எதுக்கு காலைல 8 .55 க்கு பாத்த பையன பத்தி நைட் 10 .30 மணிக்கு பேசுற.. "
"நான் உன்ன விரும்பல.. உன் கூட வாழனும்-னு ஆச படல.. நீ அழகா இருக்க னு நினைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு..."
"எனக்காக எது வேணாலும் செய்வியா.. "
"என்ன TRAIN ல இருந்து குதிக்க சொல்றியா.. "
"இல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கோ.."இயல்பான, தேர்ந்துதெடுக்கப்பட்ட வசனங்கள்..
"கடவுள்ட்ட வேண்டிக்கிறேன் உனக்கு அசிங்கம, மக்கா, ஒரு பொண்டாட்டி கிடைக்கணும் னு.. "
"இன்னைக்கி நமக்கு FIRST நைட்.."
"நான் மளிகை கடைல இருக்கேன்.."
"SO .. "
"SO குட் நைட் "
"HAI பொண்டாட்டி.."
இது போன்ற சில்மிஷ சீண்டல்களும் உண்டு..
"இந்த ஈகோ-வ எல்லாம் தூக்கி தூர எறி.. இந்த காதல் னா என்ன.. பீச் ல பாத்து பார்க் ல கட்டிபுடிச்சு.. சினிமா பார்ப்பதா.. அது காதல் இல்ல டா... அது ப்ரேமம் இல்லடு.. கல்யாணத்துக்கு முன்னாடி வரது ஒரு மயக்கம்.. பூ மாதிரி.. கிக் ஆ இருக்கும், வாசனையா இருக்கும்.. ஆனா வாடி போயிடும். கல்யாணத்துக்கு பின்னாடி வருதுல அது வேர்.. வேர் மாதிரி STRONG ஆ இருக்கும் ""எது நடந்தாலும் விட்டு கொடுத்து போ.."வசனத்தில் அசத்தல் அலைபாயுதே..
"இங்க என்ன சொல்லுது.. ஜெஸ்சி.. ஜெஸ்சி.. னு சொல்லுதா.."
"வொர்த் ஆ இல்லையா.."
"உயிர கொடுக்கலாம் சார்.."
"யாரும் இது வரைக்கும் உன்ன வெரட்டுனதே இல்லையா.. ரவுண்டு கட்டி நின்னு இருப்பானுகலே பசங்க.. மொக்க figure கே தலைகீழா நிப்பாணுக.. "
"உன் கண் வழியா அவங்க என பார்க்கல போலஇருக்கு.. "
இது எல்லாத்துக்கும் மேல..,
"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் சார் ஜெஸ்சி ய லவ் பண்ணேன் "இந்த ஒரு வரில OUT OF THE PARK SIXER அடித்து விடுகிறார் கௌதம்..
so .. diolouge ல பெஸ்ட் விண்ணை தாண்டி வருவாயா..
மாதவனுக்கு அறிமுகமே அழகாய் அமைந்ததில் அதிர்ஷ்ட்டம்..
சிம்புக்கு VTV SECOND இன்னிங்க்ஸ்.. யாரு பெஸ்ட் னு சத்தியமா எனக்கு சொல்ல தெரியலங்க..
நாம தினமும் கடந்து போற எலெக்ட்ரிக் TRAIN தேவதை ஷாலினி..
கனவுகளின் தேவதை த்ரிஷா.. இதுல யாரு பெஸ்ட் னு சொன்னா பிரச்சன தான் வரும் so .. வேணாம்..
காதல் ல ஜெயிச்சவங்களுக்கு அலைபாயுதே..
காதல் ல தோத்தவங்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா..
ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ரெண்டு படத்தையும் எப்ப போட்டாலும் பாத்துகிட்டே இருப்பேன்...
எப்படி நண்பா! இப்படி எல்லாம் யோசிகிரிங்க. மாதவன் மற்றும் சிம்பு இவர்கள் இருவரில் யாரு பெஸ்ட்னு எனக்கும் தெரியல..ஆனா ஒன்னு மட்டும் தெரியும் உங்கள போல கவிதை எழுதுறவங்கள நான் பார்த்ததில்லை நண்பா.
ReplyDeleteநன்றிகள் ஆயிரம் தோழி...
Delete