ஆடுமாடு அச போட
ராத்திரியும் நட போட
வெண்ணிலவும் தொண தேட
சழுதியில நமது கூடல்.
சந்திரனும் சாமத்துல
மேகத்தோடு காமத்துல,
வலிக்காம தேகத்துல
வழிதேடும் விரல்போல
சத்தம் கித்தம் போடாம
முத்தம் நித்தம் நீ கொடுக்க
சித்தம் பித்தம் தெளியாம
கக்கத்துல நான் கெடக்க
வெட்கம் எல்லாம் ஓடிபோயி
வெப்பம் மட்டும் கூடிபோயி
சொர்க்கம் இது தானானு
சொக்கி போன விழிதேடும்.
விடிஞ்ச சேதி தெரியாம
இமை ரெண்டும் பிரியாம
நடந்தது என்னானு கேட்டா - புரியாம
புரிய வைக்கும் சாமத்து காமம்.
No comments:
Post a Comment