Friday, 13 July 2012

மது


சோகம் என்றாலும்...,
சந்தோசம் என்றாலும்...,
துக்கம் என்றாலும்...,
மகிழ்ச்சி என்றாலும்...
மதுவை நாடும்
மதிக்கெட்ட மனிதர்கள் நடுவில்
நான் மட்டும் விதிவிலக்கா...
எனக்கு மட்டும் மதுவிலக்கா...

அருமை நண்பனின்
அழகிய பிறந்தநாளும்,
பதவி உயர்வும்,
ஒன்று சேர்த்து கொண்டாடினார்கள் அலுவலகத்தில்...

பரிகாச பேச்சுகள்
என்னை சீண்ட...,
பதவி மமதையின் கிண்டல்கள்
கோபத்தை கிளர...,
உள்ளிறங்கிக் கொண்டே
இருந்தது மது...

சுடும் நெருப்பில்
விடும் நெய்யாய்...
மனதின் நெருப்பில்
மதுவின் மயக்கம்.

வார்த்தை மோதலும்,
கைகலப்பும் தீர்ந்த பாடில்லை...
செயல் இழந்த மதியில்
எதுவும் ஏறிய பாடில்லை...

எதை எதையோ
வீசி எறிந்தேன்,
என்னை வீசி எறிந்தார்கள்
வேலை இல்லையென்று...

மது தரும் மயக்கம்
மெய் செயல் இழக்கும்
உலகம் மறக்கும் உறக்கம்
மனதிற்கு அது சொர்க்கம்...

எங்கு சென்றாலும் அவமானம்...
வேண்டியது எல்லாம் சாராயம்...
எங்கு திரும்பினும் கிண்டல்கள்...
அவை தொட்டுக்கொள்ளும் சுண்டல்கள்...

கையில் காசு இல்லை...
நடக்க பாதை இல்லை...

கேவலமாய் கிண்டல்கள்
செவிகள் வேண்டாம்..
ஏளன பார்வைகள்
விழிகள் வேண்டாம்..
அனைவரிடமும் பிரச்சனைகள்
வார்த்தைகளும் வேண்டாம்...
அனைத்தையும் மறந்து கிடக்க
மது மட்டும் போதும்.

தொண்டைக்குழிக்குள்
விக்கி நின்றது சோறு..
அப்பா சொன்னார் தண்டச்சோறு..
வீசி எறிந்தேன்
எறுமை மாடு என்றாள்
நான் என்ன சொரனை கெட்டவனா..?
எடுத்து எறிந்து பேசினேன்
அம்மா என்றும் பாராமல்...

கடிந்து பேசிய
அப்பா மீது
அடித்து பேசிட
ஓங்கின கைகள்...
அதிர்ச்சியில் நீடித்த மௌனத்தில்
வெளியேறினேன் வீட்டை விட்டு.

மதுவை நான் குடித்தேன்
அது என்னை குடித்தது.

நான் வேண்டியது என்ன?
மதுவையா..
இல்லையே...,
என் அவமானத்தின் காயத்தில்
பதியும் முத்தம் தானே
வேண்டி நின்றேன் நித்தம்.

இறப்பதற்கு முன்னே
இறுதி வார்த்தைகள்...
தவறுகள் செய்வது
மனிதனின் இயல்பு.
திருத்திக் கொள்ள
வாய்ப்பு தாருங்கள்...

Friday, 25 May 2012

நிறைவேறாத ஆசை


நான் எனது வாழ்க்கையில் ஒருமுறையேனும் இவர்களை சந்தித்து பேச விரும்பிகிறேன், அது அரை நொடியோ அரை நாளோ.. சந்திக்க வேண்டும். நான் பார்த்து வியந்த மனிதர்கள் இவர்கள். என்னால் எளிதில் பார்க்க இயலா மனிதர்கள். ஆனால் இந்த ஆசையை என்னால் கட்டுப்படுத்தவே முடியாமல் தினம் தவிக்கிறேன். எத்தனையோ வெற்றிகளும் விருதுகளும் இவர்கள் காலடியில் இருந்தபோதும் எளிமை மாறாத மனிதர்கள்..


ஏ.ஆர்.ரஹ்மான்
     நமக்கு என்று வாழ்ந்துக் கொண்டிருந்த ஒற்றை உயிர் நம்மை தன்னந்தனியே விட்டு பிரிந்து செல்கையில், அதன் இழப்பை நாம் உணரும் ஒற்றை நொடியில்..., நாம் வாழ்வின் எந்த உச்சத்திற்கும் செல்ல தயங்க மாட்டோம். நாம் எடுக்கும் தற்கொலை முடிவை கூட தடுக்க ஆள் இல்லாத தனிமை அது. யார் சொன்னாலும் கேட்க முடியாத கொடுமை அது.

எனக்கும் அப்படி ஒரு நிலை வந்தது, அழுது ஆற்ற முடியாத கண்ணீர் துளிகள் இமையிலேயே உறைந்துவிட்ட இரவினில் என் மனம் என்னிடம் இல்லை.. சின்ன தயக்கம் கூட அந்த நொடியில் இருந்ததாய் நினைவினில் இல்லை.



இந்த வார்த்தைகளை சொல்லவாவது நான் உங்களை சந்திக்க வேண்டும் ரஹ்மான் சார்...
உன் இன்னிசை மட்டும்
இல்லை என்றால்
நான் என்றோ.. என்றோ.. இறந்திருப்பேன்..

சின்ன வயசுல இருந்து இந்த ஆசையும் இருக்கு.. உங்க இசையமைப்புல ஒரு பாட்டாவது எழுதனும் ரஹ்மான் சார். நடக்காதுனு தெரியும்.. ஆசை படுறதுக்க அளவு இருக்கா.. ஆசையாவது பட்டு வப்போமே..



சச்சின் டெண்டுல்கர்
     22 வருசமா இன்னும் விளையாடிகிட்டே இருக்க ஒரே விளையாட்டு வீரன் எனக்கு தெரிஞ்சு சச்சின் தான். இவர் கூட விளையாட ஆரம்பிச்சவங்க, இவருக்கு அப்புறம் விளையாட வந்தவங்க எல்லாரும் காணம போய்ட்டாங்க.. ஆனா இன்னும் குழந்த மாதிரி விளையாடிட்டு இருக்காரு..

கிரிக்கெட் ல இனிமே சாதிக்க ஒன்னும் இல்ல ஆனா அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாத மனுசன் சார் எங்க சச்சின். இவரு விளையாட ஆரம்பிக்கும்போது பிறக்காத பசங்க கூட இவரு கூட பார்ட்னெர்ஷிப் போட்டா செஞ்சுரி அடிக்கிறானுக.., இப்படி ஈகொ இல்லாத மனுசன பாக்க முடியுமா..

சச்சின் இல்லாத கிரிக்கெட் என்னால நினச்சு கூட பாக்க முடில..

WORLD CUP WON  பண்ண உடன சச்சின தோழ்ல தூக்கி வச்சுகிட்டு சுத்துனத பத்தி விராட் கோலி சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது..
“ 20 வருசமா இந்தியன் கிரிக்கெட்ட தன் தோழ்ல தாங்குனவர நாங்க எங்க தோழ்ல தாங்க கூடாதா..?”
இந்த இடத்துல நான் இன்னொருத்தருக்கும் நன்றி சொல்ல விரும்புறேன்..
“ அவரு அவுட்டாகி தலைகுனிஞ்சு நடந்து வந்தத பாத்துட்டு என்னால்
சும்மா இருக்க முடியல” என்று சொல்லி எங்களுக்கு CUP வாங்கி கொடுத்த M.S.DHONI தான் அவரு..

ஒரே ஒரு பந்தாவது நான் உங்களுக்கு போடணும் சார்..
இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஸ்டீவ் வாக், க்ளென் மெக்ராத் மாதிரி உங்களயும் ஒரு சமூக சேவகனா பாக்க ஆசபடுறேன் சார்.



ரஜினிகாந்த்
     இவர ஏன் தான் எல்லாருக்கும் பிடிக்குதோ எனக்கும் தெரியல வடிவேலு சார்.

குருவையும் நட்பையும் இவ்வளவு உயரத்துல இருந்தும் மதிக்கிற மனப்பான்மை யாருக்கு சார் வரும்.. எத்தனையோ வாய்ப்புகள் ஆட்சிக்கு வர.., ஆனா அரசியல் என் தொழில் இல்ல னு ஒதுங்கியதும், மக்களுக்கு உதவி செய்ய அரசியல் மட்டும் வழி இல்ல னு அறிவிச்சதும், என்ன ரொம்ப வியந்து பாக்கவச்ச விஷயங்கள்.

ஒரு படம் வெளிவந்தா திருவிழா மாதிரி கொண்டாடுறதும், உடல் நிலை சரி இல்லனா தமிழ்நாடே பிரார்த்தனை செய்யுற அளவுக்கு ஒரு மனிதன் மேல அன்பு செலுத்துறாங்கனா அந்த மனுசன் எவ்ளோ கொடுத்துவச்சவனா இருப்பான்.

யாருக்கு சார் கிடைக்கும் இவ்ளோ பேரு, புகழ், செல்வம், எல்லாத்துக்கும் மேல எங்க மக்களோட அன்பு..

ராகுல் ட்ராவிட்

     இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை காட்டும் இவர் எப்படி பட்ட ஆள் என்று.. ஒருமுறை கூட சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஒழுங்கீன நடவடிக்கைகாக தண்டிக்காத ஒரே வீரர் ட்ராவிட் மட்டும் தான். வெற்றியோ தோல்வியோ எதற்கும் உணர்ச்சிவசபடாதவர்.

அவருடைய தனிப்பட்ட சாதனைக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய பெருஞ்சுவர் ட்ராவிட். சின்ன கிசுகிசுவில் கூட சிக்காமல் எப்படி தான் மனுசன் வாழ்ந்தானோ..

பொறுமைசாலி, மிக மிக பொறுமைசாலி.. ஐயா சாமி உனக்கு பந்து போட எங்களால முடியாதுனு எதிரணி வீரர்களை கதறடிச்ச பொறுமைசாலி..

தன் மீதான எந்த ஒரு விமர்சனத்தையும் தன் திறமையால் வீழ்த்தியவர்.

RAHUL DRAVID = DETERMINATION




கமலஹாசன்
     எல்லாத்தையும் கத்துக்கிற ஆர்வம் தான் எனக்கு இவருகிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம். சினிமா இவரது துறை என்றால் அந்த துறையில் இவருக்கு தெரியாத விஷயங்கள் இல்லை. எதையும் செய்து பாக்க துணிபவர். அது மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்றாலும் சரி தன் முயற்சியை கை விடாத மனிதன்.

இவருடைய வசனங்களுக்கு நான் அடிமை..
“மன்னிப்பு கேக்குறவன் மனுசன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்.”
“கடவுள் இல்லனு யார்ங்க சொன்னா.. இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றோம்.”

ஒரு தடவை ஒரு நிருபர் நீங்க ஏன் அரசியல்க்கு வரலனு கேட்டாராம்
அதுக்கு கமல்,”எனக்கு நடிக்க தெரியும்ங்க ஆனா அந்த அளவுக்கு நடிக்க தெரியாது”னு சொன்னாராம்.

உடல் உறுப்புகள் அனைத்தையும் இவர் தானம் செஞ்சப்போ எனக்கும் அந்த ஆசை வந்தது, அந்த நாள்க்காக காத்துகிட்டு இருக்கேன், ரொம்ப சீக்கிரம் செஞ்சுடுவேன்னு நினைக்கிறேன்.



தோழர் நல்லகண்ணு
     75000கோடி ரூபாய் ஊழல் சர்வசாதாரணமா நடக்குற இந்த காலத்துல இன்னும் தூய்மையா இருக்கிற ஒரே அரசியல்வாதி.. ஒரு அரசியல்வாதி இப்படி தான் இருக்கனும்னு எடுத்துக்காட்டா வாழ்கிற அரசியல்வாதி. அடித்தட்டு மக்களுக்காக அவர்களுடன் கைக்கோர்த்து போராடும் போராளி..

ஒரு தடவை புதுக்கோட்டை பக்கத்துல ஒரு மீட்டிங்.., அதுல கலந்துகிட்ட பேசிய தோழரோட பேச்சு முடிய இரவு 2 மணி ஆச்சாம்..மீட்டிங் முடிஞ்ச உடனே எல்லாரும் கலைஞ்சு போய்ட்டாங்க.. மறுநாள் காலைல அந்த மீட்டிங் நடந்த இடத்த பார்க்க வந்தவங்களுக்கு அதிர்ச்சி..

ஒரு மரத்துக்கு அடியில வெறும் தரையில் படுத்து இருந்தாராம் தோழர். இப்படி ஒரு அரசியல்வாதியை நீங்க காட்ட முடியுமா..

பியர் கிரில் (BEAR GRYLL)  
                THE REAL HERO
யாரும் எளிதில் செல்ல முடியாத வனப்பகுதிகள், கடல் தீவுகள், பனிமலை பகுதிகள், பாலைவனங்கள், எரிமலை பகுதிகள், நொடிக்கு நொடி மாறும் தட்ப வெப்ப நிலைகள், உணவு என்பதே இல்லாத சூழ்நிலை, தண்ணீர் இல்லாமல் சிறுநீரையே குடிக்கும் நிலை, உயிர் வாழவே முடியாத நிலைகளில் நீங்கள் சிக்கிக்கொண்டால் அங்கிருந்து எப்படி உயிருடன் மீண்டு வருவது என கற்றுக்கொடுக்கும் டிஸ்கவெரி சான்னெல்லின் MAN VS WILD ன் நாயகன்.

ஒரு மணிநேரம் ஒரு முழுநீள ஹாலிவுட் படம் மாதிரி விறுவிறுப்பு குறையாத நிகழ்ச்சி. எதை சாப்பிட போறான், எப்படி தங்க போறான், எப்படி தடைகளை கடக்க போறான்னு வியப்பாவே இருக்கும். அசைவ உணவு பிரியன் அதுக்காக சிக்கன் மட்டன்லாம் சாப்பிடுவான் நினைக்காதிங்க.. அதுலாம் அவரு சாப்பிட மாட்டாரு.. பாம்பு, தவளை, சிலந்தி, வெட்டுகிளி, பாக்கவே சகிக்காத பூச்சி இனங்கள் தான் பிடிக்கும், சாப்டுட்டு அது எப்படி இருந்துச்சுனு வேற விளக்கம் கொடுப்பாரு.

இவரு கூட ஒரு தடவை மடகஷ்கார், அமேசான் காட்டுக்குள்ள தொலைஞ்சு மீண்டு வரனும்னு ஆசையா இருக்கு..

வைரமுத்து
     இவரு எப்ப கவிதை எழுதுறார்னு கண்டுபிடிக்கனும்.. எப்படி அந்த கவிதை வருதுனு பாக்கனும்.. கவிதை, நாவல்னு எத எழுதினாலும் எப்படி விருது வாங்குறாருனு கண்டுபிடிக்கனும்.

இளையராஜா கூட கைக்கோர்த்து ஒரு தலைமுறையையும், ஏ.ஆர்.ரஹ்மான் கூட சேர்ந்து என் தலைமுறையையும் இவருடைய பாடல்கள் நனைச்சு போயிருக்கு..

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பு, இதையெல்லாம் படிச்சு பாருங்க.., இந்த மனுசன பத்தி வியப்பா பேசாம இருக்க முடியாது..

ஷங்கர்
     100% PERFECTION காக உழைக்கிற உழைப்பாளி.. இவருடைய உழைப்பை இவருடைய படங்களின் ஒவ்வொரு சீன்லயும் நாம பாக்கலாம். அவ்ளோ நேர்த்தியா இருக்கும்.

பாட்டுக்காக ஒவ்வொரு தடவையும் இவர் கண்டுபிடிக்கிற லொகேசன்ஸ் எப்படி தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ..

பொன்னியின் செல்வன் நாவல்ல நீங்க இயக்கனும்னு எனக்கும் ஆசையா இருக்கு ஷங்கர் சார்.

ஸ்ரேயா கோஷல் (SHREYA GHOSAL)
              முதல்முறை இவரின் பாடல்களை கேட்டதும் இவருக்கு நான் அடிமையாகிவிட்டேன். அழகான பாடகி..
தேவ்தாஸ் ஹிந்தி படம் தான் முதல் படம் அதுல ஐஸ்வர்யா ராய் வர ஐந்து பாடல்கள் பாடுனது இவங்க தான்.., அதுக்காக நேஷ்னல் அவார்டும் வின் பண்ணாங்க.. தமிழ்ல முதல் பாட்டு “செல்லமே செல்லம்...” பாடல் ஆல்பம் திரைப்படத்திற்காக கார்த்திக்ராஜா இசையில பாடுனாங்க..

தமிழ் தெரியாத ஒரு பாடகி தமிழ்ல அச்சுர சுத்தமாக உச்சரித்து பாடுவது தான் எனக்கு இவங்கக்கிட்ட ரொம்ப பிடிச்சது..

ஒருவேள நான் ஏ.ஆர்.ரஹ்மான்க்கு பாட்டு எழுதுனா.. அந்த பாட்ட ஸ்ரேயா தான் பாடனும்னு அடம் பிடிப்பேன்.

சாய்னா நேவால் (SAINA NEHWAL)
                என் விளையாட்டு காதலி சாய்னா..
இந்தியாவில் கிரிக்கெட் தவிற வேற எந்த விளையாட்டுக்கும் வரவேற்பு கிடையாது என்கிற கருத்தை உடைச்சவங்க.. நீங்க உங்க விளையாட்டுல உங்க திறமையை மிகச்சரியா வெளிப்படுத்துங்க.. உங்கள அவங்க தலைமேல தூக்கிவெச்சு கொண்டாடுவாங்கனு நிரூபிச்சவ என் சாய்னா..

காதல் திருமணம் தான் செய்வேன்னு சொல்றா.. பாப்போம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குதானு..

யுவ்ராஜ் சிங்
     உலகக்கோப்பை தொடர் நாயகன்.. தன்னம்பிக்கை நாயகன்..

சச்சினுக்கு அப்புறம் யுவி ஷாட்ஸ் தான் ஸ்டைலிஷ்..

யுவி அறைசதம் அடிச்சா இந்தியா தோத்ததே கிடையாது.. அப்படி ஒரு மேட்ச் வின்னெர்.

கேன்சர்னு கேள்வி பட்டதும் நான் ஆடி போய்ட்டேன்.. ஆனா அத போராடி தோக்கடிச்சு திரும்பி இருக்காரு.. திரும்ப ஒரு ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்.

ஐஷ்வர்யா ராய்
     என்று உலக அழகி பட்டம் வாங்குனாங்களோ அன்றிலிருந்து இன்று வரை இவங்க எது செஞ்சாலும் நியூஸ்.. இந்தியாவுல அழகுனா இதுவரைக்கும் அடுத்த வார்த்த ஐஷ்னு தான் இருக்கும். இப்போ கொஞ்சம் வெயிட் போட்டு இருக்காங்க.. உலகமே கொண்டாடுன ஒரு அழகிய எனக்கும் பாக்கனும்னு ஆச இருக்காதா..

விஷ்வநாதன் ஆனந்த்
ஒரே ஒரு கேம் இவர் கூட விளையாடனும்..



ஒரு விளையாட்டில் 48 சர்வதேச விருதுகள் வென்றுள்ள ஒரே இந்திய வீரன். இதை நீங்கள் படிக்கும் இந்த தருணத்திலும் அவர் இன்னொரு வெற்றிக்காக போராடி கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றால் இம்முறையும் உலக சாம்பியன் இந்த தமிழன்.

Tuesday, 22 May 2012

யாழிக்கு கவிதைகள்



நேரம் காலம் தெரியாமல்
அலைபேசியில் அழைக்கும்
நண்பனை என்ன செய்ய
கடற்கரை காற்றில் கரைகிறது
எனக்கான காதல் முத்தங்கள்..



காதல் கதைகள் படிக்கும் போது
நானே கதை நாயகன் ஆகிவிடுகிறேன்.
கதையில் திருப்பம் வந்து
வலி தந்தால்
இது என் காதல் இல்லை
என உணர்கிறேன்
இருந்தும் நான் உதிர்த்த
கண்ணீர் துளிகள் எதற்காக..



உறங்கிய பிறகு
மனம் திடீரென எழுப்பும்
இந்த பாடலை கேள் என..
அந்த பாடல்களின்
ஏதொ சில வரிகளில்
உன் ஞாபகங்கள்...

Friday, 18 May 2012

யாழிக்கு கவிதைகள்



மெலிதாய் எனது
காதலை வெளிப்படுத்தினேன்
உனது வலது காலணியுடன்
எனது இடது காலணி
உனது இடது காலணியுடன்
எனது வலது காலணி

நீ அதை மறுத்ததும்
புரிந்தது எனக்கு..
எனது காலணிகளை தனியாகவும்
உனது காலணிகளை தனியாகவும் வைத்து
நடுவில் உனது
தந்தையின் காலணிகளை வைத்தபோது...

கவிதை கதை


காதல் வேறு
காமம் வேறு..
காதல் வேறு
நட்பு வேறு..

ஆண் பெண் பேசுவதே
தவறாகும் தேசத்தில்
நட்பு என்ன..?
உறவு என்ன..?
காதல் என்ன..?
கத்திரிக்காய் என்ன..?

கண்கள் சுழற்சி..
வயதின் கவர்ச்சி..
ஹார்மோன் கிளர்ச்சி..
மனதின் வீழ்ச்சி..
எகிறும் உணர்ச்சி..
காதல்.

தினமும் கண்கள்
காண விரும்பும் காட்சி
அவள் முகமே..

அன்பின் எல்லை நட்பு..
நட்பின் எல்லை காதல்..
காதலின் எல்லை காமம்..
காமத்தின் எல்லை..

எல்லைகள் விரிந்தாலும்
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்
எல்லா நிலைகளிலும்..

முதல் பார்வை
பார்வையில் பரவசம்
ஆதலால் பழக்கம்

சின்னதாய் பேச்சு
கண்களில் வீச்சு
மனம் மாறியாச்சு
இருவருக்குள்ளும் என்ன ஆச்சு?

நட்பின் எல்லையை
விரைவில் அடைந்தாலும்
கடக்க முடியவில்லை
மனதின் குழப்பத்தால்..

நட்பு
மெள்ள மெள்ள
நகர்ந்து
காதலுக்குள் நுழைவதை
ஏன் எவரும்
ஏற்க மறுக்கின்றனர்..?

ஊர் ஏசுமோ..?
உறவுகள் ஏசுமோ..?
ஆயிரம் ஆயிரம் தயக்கம்
காதலை சொல்ல..

காதலில் நட்பு இருக்கலாம்- ஆனால்
நட்பில் காதல் இருக்கக்கூடாது.
விந்தை உலகம் இது..

அவளிடம்
சக மாணவன் பிறந்தநாளில்
தன் காதலைக் கூற
கொண்டாட்டம் அடங்கியது
அவள் விட்ட அறையில்..

பல முறை
பல சந்தர்ப்பங்களில்
பல கோணங்களில்
சிரிக்க சிரிக்க
அவள் விவரித்ததை
எப்படி மறக்க முடியும்..?

அவன் காதலிக்கிறான்
ஆனால் அவள்.?

அவளும் காதலிக்கிறாள்
உருகுகிறாள்
அன்பு பாராட்டுகிறாள்
அவனை போலவே
தயங்குகிறாள்
யோசிக்கிறாள்
தவிக்கிறாள்

அவன் விடுபடுவதாய்
தெரியவில்லை
தவிப்பின் சிறையிலிருந்து..
இவள் போட்டு உடைத்தாள்
இன்னும் எத்தனை நாள் தான்
உன்னை நானும்
என்னை நீயும்
ஏமாற்றிக்கொண்டே
இருக்க போகிறமோ..?

காதலை சொல்ல
புரிதலை சொல்ல
இதைவிட சிறந்த வரிகள்
இருப்பதாய் தெரியவில்லை அவளுக்கு..

அவள் சொன்னதும்
அவன் அங்கம் புகுந்தது வெட்கம்.
வெட்கம் இயல்பானது தான்
ஆனால் அதை
பெண்ணுடமையாக்கி
போக்குக் காட்டிவிட்டது சமூகம்.

வேதனைக்கும்
தவிப்பிற்கும்
இன்று தான் விடுதலை என்றான்.

ஆசையாய் கேட்டான்
திருமணம் எப்போது..?

அதற்குள் அவனது
எண்ண ஓட்டம்
அவளின் பதிலை நோக்கி
பதிலின் பொருளை நோக்கி..

இப்பவே என்றால்
நம்மீது சந்தேகம்
என்று எண்ண தோன்றும்

கொஞ்ச நாள்
சென்ற பிறகு என்றால்
நண்பனா.. OK
ஆனா லவ்வரா..
யோசிப்பதாய் தோன்றும்..

பிறர் மனதை புரிந்து
வலிகள் இல்லா
வேதனையில்லா
வார்த்தைகள் தருபவர்
கடவுளுக்கு நிகரானவர்.

அவள் கூறினாள்
எப்ப வேண்டுமென்றாலும்..

வீடு என்ன
உலகமே எதிர்த்தும்
திருமணம் செய்தார்கள்
பதிவு அலுவலகத்தில்..

அவள் முடிவு செய்தாள்
பையனோ..
பொண்ணோ..
காதல் மட்டும் வேண்டாம்
ஆல்பத்தை புரட்டும்
அல்ப சந்தோசம் கூட கிடைக்காது
என்று கூறி காதலை தடுக்க..

இப்படி ஓர் பிறப்பு


நான் பிறப்பதற்கு முன்பே சுவையாகிவிட்டது என் வாழ்க்கை. நான் உருவாகிய போதே, ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருந்ததால் என்னை கலைக்க திட்ட்மிட்டுவிட்டார்கள். பொம்பள புள்ளையா இருந்தாலும் இருக்கும் கலைக்க வேணாம்னு எங்க அப்பாயி (அப்பாவோட அம்மா) தான் சொன்னுச்சாம்.. அதனால ஒரு அழகான ஜுலை மாதம் 4-ம் நாள் அன்று பிறந்தேன்...

பிறந்தது ஆண் குழந்த என்ன பண்றது வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. அவங்க ஆசை பட்ட மாதிரி நான் பிறக்காததால என்ன ஆசையா அவங்க வளர்க்கல.. அதுக்காக அப்பவே நான் வருத்தபடல.. பசிச்சா கூட அழுக மாட்டேனாம்.. கை சப்பிக்கிட்டே படுத்து இருப்பேனாம்.. இப்பவும் அப்படி தான் யாராவது சாப்பிட கூப்பிட்டாதான் சாப்பிடவே தோணும்.. தனியா சாப்பிட பிடிக்காது..


பிறக்கிறதுக்கு முன்னாடியே இப்படி யோசிச்சு பிறந்ததாலயோ என்னவோ, எந்த ஒரு விசயத்துலயும் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியாம குழம்பி போயிடுறேன். அந்த மாதிரி சமயங்களில் எனக்கு உதவுவது டாஸ் போட்டு பாக்குறது தான்.. சிவாஜி படத்துல ரஜினி சார் பண்றத பார்த்துட்டு எனக்கும் அந்த பழக்கம் தொத்திக்கிச்சு. அதுக்காகவே ஒரு ஒரு ரூபாய் காயின் ஒன்னு பையிலியே வைச்சிருப்பேன். அந்த காயின் எனக்கு POUL  ACTOPUS  மாதிரி சரியான முடிவத்தான் கொடுத்திருக்கு..

ஆனா சென்னையில கழிஞ்ச மோசமான நாட்கள்ல அந்த காயின செலவு பண்ணாம பாதுகாக்கிறதே ஒரு போராட்டமா போச்சு.. ஒரு மிக மோசமான நாள்ல் பேருந்து பயணச்சீட்டிற்காக அத செலவழிச்சதும் வேதனை.. ஒரு காயின்காக அன்னைக்கி நான் நிரம்ப வருத்தப்பட்டுட்டேன். அதுக்கு பிறகு எந்த காயினும் வச்சுகிறது இல்ல, கைல கிடைக்கிறத வச்சு முடிவு எடுத்துகிறேன்.


நான் ரொம்ப வருத்தபடும் நாட்கள்.., என் சோகமான நாட்கள்.. என்ன யாராவது திட்டும் போது எங்க அப்பாயி பக்கத்துல இருந்துச்சுனா..

“என்ன அன்னைக்கே கலைச்சிருந்தா எனக்கு இதெல்லாம் நடந்து இருக்காது-ல, கிழவி எல்லாமே உன்னால தான்” னு திட்டுவேன். என்ட அதிகமா திட்டு வாங்கினது கிழவியா தான் இருக்கும், பாவம் கிழவி சாகறதுக்கு முதல் நாள் கூட திட்டு வாங்கினுச்சு..

“யாரு கண்டா.. நீ பொட்ட புள்ளயா பிறந்து என் புள்ளைக்கி சோறாக்கி போடுவனு நினைச்சேன்.. இப்படி ஆம்பள புள்ளயா பிறந்து கேள்வி கேப்ப னா.. நினைச்சேன்.. “ இப்படி சில சமயமும்..,

“போடா-னு ஆரம்பிச்சு வாய்க்கு வந்தபடி எல்லாம் வசவு பாடியும்..,”

எதுவுமே பேசாம என் கருத்த ஏத்துக்கிற மாதிரி அமைதியாவும் சில சமயம் அதன் பதில் இருக்கும்..


 சரி பிறந்துட்டேன்.., எனக்கு பேரு வைக்கணுமே.. அதுல ஒரு பெரிய காமெடியே பண்ணிருக்காங்க..

நான் பிறந்த சில தினங்களுக்கு பிறகு இலங்கை அரசவையில் ஈழ தமிழர்கள் பொன்னம்பலம், யோகேஷ்வரன் என்ற இருவரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.

எங்க மாமாட்ட என்ன கொடுத்து எனக்கு பெயர் வைக்க சொல்லிருக்காங்க எங்க அம்மா. அந்த அமைச்சர்களின் ஞாபகமா பொன்னம்பலம் னு வைக்க சொல்லியிருக்கார்.

உன்ட போயி கேட்டேன் பாருனு தலையில அடிச்சுக்காத குறையா எனக்கு எங்க அம்மா யோகேஷ்வரன் னு வச்சிருக்காங்க..

அவர் சொன்ன பேர் வைக்கலன்ற கோபமோ என்னவோ, இன்னைக்கி வரைக்கும் என் பேர் சொல்லி அவரு கூப்பிட்டதேயில்ல..

மகேஷ்வரன், கமலேஷ்வரன், யோகேஷ்வரன்.. ஈஷ்வரன்லயே முடிஞ்சதால அதுவே நிலைச்சுடுச்சு..

அதுவும் SCHOOL-ல JOIN பண்ற வரைக்கும் தான்.. ALPHABETICAL ORDER ல வரும் போது என் பேரு கடைசியா வந்ததால பாலச்சந்தர் னு மாத்தி வச்சுட்டார் எங்க அப்பா..

குடித்துவிட்டு தாமதமாய் வரும் அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மடியில் உறக்கம் வராத பல இரவுகளில் சலிக்காமல் கேட்ட கதை இது...

Wednesday, 16 May 2012

நீ இருந்தாய்..


உன் சிறுமுதல் பார்வையால்
முதல் மழை என் மனதில்..

இதுவரை யாரையும்
காதலித்தது இல்லை என்றாய்...
முதல்முறையாக உன்னை
காதலிக்கத் தொடங்கினேன் நான்..

நீயும் நானும்
எதிர்பாராத நொடியில்,
சொல்லிவிட்டேன் என் காதலை..

பொறுத்திருக்க சொன்னாய்..
நான் உன்னை
வெறுத்திருந்தேன்..

காத்திருக்க சொன்னாய்..
நான் கரைந்து போய் நின்றேன்..

சின்னச்சின்னதாய்..
முத்தங்கள் தந்து,
அப்படியே அணைத்து நின்றாய்..
என் கோபங்கள் மறைந்து
உறைந்து நின்றேன்..

அறை மனதாய்..,
மனதை அடக்கம்
செய்ய சொன்னாய்..
அடுத்த வினாடியே
உன்னை நினைத்தேன்..

நீ எனக்கில்லை..
நீ எனக்கில்லை என்றாய்..
என் காதலை
வளர்த்துக் கொண்டே
சென்றேன் நான்..


உன்னுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும்
நண்பா என்கிறாய்..
சிரிப்பதா.. அழுவதா..
என தெரியாமல்
இரண்டையும் செய்துவிட்டு
பிரிகிறேன் நான்..

நீ இருந்தாய்
அது போதும்...