Sunday, 26 August 2012

மழை நினைவு


உன்னை நினைக்கவே
என்னை நனைக்குது மழை...

துளிர் விடும் இலை போல்
தளிர் விட்டு பார்க்கிறது
நீயும் நானும்
விரல் கோர்த்த படி
வீதியில் நனைந்த ஒரு மழைதினம்.

உன்னையும் என்னையும் நனைத்த
மழைத்துளி எங்கே என்கிறாய்,
பதில் சொல்ல தெரியாமல்
நானும் தேடி பார்க்கிறேன்.

அடைமழையில்
அடைக்காக்கும் காகம் போல
போர்வைக்குள் நீயும் நானும்...

மழைக்கால இரவின்
தேனீர் இதமாய்
உன் இதழ் முத்தம்...

இலையில் தேங்கி
வழியும் நுனிநீர் போல
இமையில் கசியும்
சிலதுளி விழிநீர்...

மழை நின்றபின் நிசப்தமாய்
பிரியும் நொடியில்
உன் மௌணங்கள்....

No comments:

Post a Comment